ஜோஸப் விஜயும், விஜய் ஆன்டனியும், செபாஸ்டியன் சீமானும்!
டிசம்பர் 2009ல் ஜோஸப் விஜயைப் பற்றி கன்ன-பின்னா என்று இணைத்தளங்களில் செய்திகள் வந்தன. மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி!
சனிக்கிழமை, ஜூன் 26, 2010, 10:11[IST]
விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைப்பாளராக மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆன்டனி. சிங்கள ராணுவம் தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என தமிழர்களின் கோபத்துக்குள்ளானவர் விஜய் ஆன்டனி. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் இலங்கை ராணுவத்துக்காக கச்சேரிகள் நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த ஒரே காரணத்துக்காக முன்பு இவர் இசையமைத்த வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணிப்பதாக பல தமிழ் அமைப்புகள் அறிவித்தது நினைவிருக்கலாம். ஆரம்பத்தில் வேலாயுதம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், வேலாயுதத்துக்கும் விஜய் ஆன்டனியே இசையமைக்கட்டும் என்று விஜய் சொல்ல, அதற்கு இயக்குநர் ஜெயம் ராஜாவும் ஒப்புக் கொண்டாராம்! அடுத்தவாரம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது. |
ஜோஸப் விஜய் என்கின்ற விஜய் என்ற தமிழ் நடிகன் மற்றும் செபாஸ்டியன் சீமான் என்கின்ற சீமான் என்ற தமிழ் இயக்குனர், ஸ்ரீலங்கை தமிழ் பிரச்சினையில் உள்ள ஆணுகுமுறை கருத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது.
இதை இந்தியத் தமிழர் மற்றும் இந்தியர் அல்லாதத் தமிழர் என்று பார்க்கும்போது பல பிரச்சினைகள் வருகின்றன.
தமிழர்கள் சினிமாகாரர்களை-நடிகர்களை பல சமூக விஷயங்களுக்கு, பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஒட்டு மொத்தமாக, தமிழர்கள் இணைந்து பலமாக சாதிக்கவேண்டியதை சாதிக்க முடியாமல், பிரிந்துள்ளனர், பிரிக்கப்பட்டுள்ளனர், பிரிந்து செயல்படுகின்றனர் போலத் தெரிகிறது.
இதில் அமைதியாக, பிரச்சினை கவனித்துப் பார்த்தால், எவ்வாறெல்லாம் தமிழ் முகமூடி அணிந்துகொண்டு தமக்கு எந்தவிதத்திலும் லாபம் வரும் என்பதனை பார்த்து அதன்படியே செயல்படுவது தெரிகிறது.
சினிமா முதலீடு, வாங்குதல், விநியோகித்தல், வீடியோ-ஆடியோ உரிமை பெருதல், நடிக-நடிகையரைத் தேர்ந்தெடுத்தல், சினிமா-நிகழ்ச்சிகள், நடனங்கள், கலை-நிகழ்ச்சிகள் நடத்துவது, …………….என்ற கோடிக்கணக்கான பணம் புழங்கும் வியாபாரத்தில் “இந்தியத் தமிழர் மற்றும் இந்தியர் அல்லாதத் தமிழர்” ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தவிர, இதனால் லாபம் அடைந்து மற்ற வியாபாரங்கள், தொழிற்சாலைகள், பங்கு வணிகம், என்று பலவழிகளில் முதலீடு செய்து, அதன் தொடர்புகளில், தத்தமது வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டு அனுபவித்து வரும் “இந்தியத் தமிழர் மற்றும் இந்தியர் அல்லாதத் தமிழர்” குழுமங்கள், குழுக்களும் உண்டு.
அவற்றுடன் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் இந்திய அரசியல் ஈழப்பிரச்சினை மற்றும் இலங்கைப் பிரச்சினையில் ஈடுபடும்போது தமிழர்களின் சமூகப் பிரச்சினைகள், இலங்கையில் தமிழர்கள் பட்ட / படும் கஷ்டங்கள், அவர்களது உரிமைகள் திரும்ப அளித்தல், அவரவர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுப்புதல், இழப்பிற்கு ஈடு செய்தல் முதலியவற்றைப் பொறுமையாக சிந்தித்து ஆவண செய்யவேண்டிய முக்கியமான நிலைகளில் இருக்கவேண்டியதை மறந்து, உணர்ச்சிப் பூர்வமாக பேசி, எழுதி, இணைதளங்களில் பிரச்சாரம் செய்து, செய்யவேண்டிய காரியங்களை மறந்துவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது.
சமீபத்தில், செபாஸ்டியன் சீமான் மற்றும் ஜோஸப் விஜய் விவகாரங்கள் நிச்சயமாக சாதாரணத் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு விசித்திரமக உள்ளது.
இந்த கீழ்காணும் விஷயங்கள் ஈ-மெயில் மூலம் அனைவருக்கும் அனுப்பபட்டு வருகிறது.
யார் இந்த விஜய் ? இவரின் பூர்வீகம் என்ன ?
ஊரே எரிய மன்னன் பிடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை! 35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது.
அரை இலட்சம் மக்களை இழந்துவிட்டோம் சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை…இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே (Iraj Weeraratne)
இவருடன் சேர்ந்து கைகோர்த்து நிக்கிறது வேட்டைக்காரன் யுனிட்! இன்னும் சில பாடல்களை விஜய் அன்ரனி இவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாராம். எதுவும் செய்யுங்கள் எங்களிடம் வராதீர்கள். வந்தால் புறக்கணிப்போம்.
மன்னிப்புக் கேட்டுவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?
வியாபாரம் என்றால், நிச்சயமாக மன்னிப்பு கேட்கப்படும்!
குறிச்சொற்கள்: இந்தியர் அல்லாதத் தமிழர், எஸ்.ஏ. சந்திரசேகரன், செபாஸ்டியன் சீமான், ஜோஸப் விஜய், தமிழின விரோதி, தமிழீழ விடுதலைப் படை, விஜய் அன்ரனி, விஜய் ஆன்டனி, வேட்டைக்காரன் திரைப்படம் புறக்கணிப்பு, வேலாயுதம்
12:41 முப இல் ஜூன் 29, 2010 |
கனடாவில் நடந்தது என்ன?-சீமான்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4, 2009, 14:41[IST]
http://thatstamil.oneindia.in/news/2009/12/04/seeman-slams-evks-elangovan.html
சென்னை: ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் [^] கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகி விட்டது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.
கனடாவில் கைது செய்யப்பட்டது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரன் போஸ்டர்களைக் கிழித்தது, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார்.
அதன் விவரம்…
வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண்டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ஈழமுரசு என்னை அழைத்திருந்தது.
இதற்கிடையில் 25ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை.
தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன. நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்! என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.
இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.
இந்திராவைக் கொன்றது நியாயமா?
மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்? எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.
பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா? என்றார். உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது.
உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, இவர் உன்னோட பிரதரா? எனக் கேட்டார். ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்! எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார்.
எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறையிலேயே சிக்கவைத்துவிடவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.
பிரபாகரன் இருப்பதால்தான் எழுச்சி நிலவுகிறது…
வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது.
வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள்.
பிரபாகரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும்- அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்?
தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.
என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோவனின் போஸ்டரையும் ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்று வரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின் அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை.
இளங்கோவனுக்காக மட்டும் கிளம்பிய போலீஸ்…
தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால், இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக் கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக ஜோடித்திருக்கிறது போலீஸ்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக, வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார். தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப் பார்க்கட்டும்.
சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங்கோவனுக்கு இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார்.
போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது. இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள், வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள் என்றார் சீமான்.
10:35 முப இல் செப்ரெம்பர் 7, 2013 |
[…] [18] https://srilankanissue.wordpress.com/2009/12/13/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%… […]