Archive for the ‘இலங்கைப் பிரச்சினை’ Category

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

Muslims denigrating comments-3

சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை கண்டு பிடிக்க வேண்டும்: சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்[1]. திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் 26.04.2018 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்ததாவது, “இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரட்சனையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த வேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரட்சனையை பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன.  தமிழக அரசியல்வாதியின் பேச்சைப் போலவே இவர் பேச்சு இருக்கிறது.

 Muslims denigrating comments-1

ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: இம்ரான் மகரூப் தொடர்ந்து கூறியது, “முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாச்சார ஆடை அணிந்து வர மறுக்கப்படுவதால் இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் காலச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதே போன்ற ஒரு பிரட்சனை சிறிஜெயவர்தனபுற ஜனாதிபதி வித்யாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றது அந்தமதத்தவர் தமது மதத்தை பிரதிபலிக்கும் கலாச்சார ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது நினைவுகூறத்தக்கது,” என தெரிவித்தார்[2].

Muslims denigrating comments-4

முஸ்லிம் அமைப்புகள் தங்களது சுயமுகங்களை வெளிக்காட்டியது: முஸ்லிம் அமைப்புகள், இதனை எதிர்த்து மதவாத ரீதியில் பதாகைகளை வைத்துக் கொண்டும், தூண்டும் வகையிலும் பேசி, ஆர்பாட்டம் செய்தனர்[3]. 27-04-2018 ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர்- சுலோச்சனா ஜெயபாலன், பாடசாலை நிர்வாகம் எதிர்த்து கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தனர்[4]. “கலாச்சாரத்தின் பெயரால் ஆபாசத்தை ஆதரிக்காதே, உடலை மறைத்தால் காமுகர்கள் தான் கோபப் படுவார்கள், ………………..சேலை உலக மகா ஆபாசம்…………” என்றெல்லாம் பதாகைகள், கோஷங்கள், சமூகவளைத் தளங்களில் கேவலமான பதிவுகள், பிரச்சாரங்கள் முதலியவை, முகமதியரின் உண்மை முகத்தை வெளிக்காட்டி விட்டது[5]. இருப்பினும், இதைப் பற்றி சந்தோசமகாவே இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், அப்பாதகை புகைப் படங்களில் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறர்கள்[6]. எப்படியாவது, அடிப்படைவாதத்தை, உரிமை என்று சொல்லி, பிரச்சினையை உண்டாக்கி, சமூகத்தில் கலவரத்தை உண்டாக்கத்தான் திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தெரிகிறது. இனி ஶ்ரீலங்காவில் குண்டுகள் வெடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

Muslims denigrating comments-5

துலுக்கரின் கேவலமான செயல்கள்[7]: தீவகம் என்ற ஶ்ரீலங்கா இணைதளம், இவ்விரங்களைக் கொடுக்கிறது: முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேவலம் கெட்ட சில முஸ்லிம்கள் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை ஆபாச பொருளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்களின் அவயங்களை ஆபாசமாக கோடிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பெண்களும் கேவலமானவர்கள் என்ற தொணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை, மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து தங்கள் கேவலமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Anti-Hindu demo - Kanni 27-04-2018-2

கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளனர்.குறித்த பாடசாலையில் ஏற்கனவே மூன்று முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பாடசாலைக்குரிய சீருடையுடன் தமது மத விதிகளை மீறாமலும் ஸ்காப் அணிந்து வந்தனர். ஆனால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை ஒருவர், தான் அபாயாவுடன் தான் வருவேன் என்று கூறியுள்ளார். பாடசாலை விதியை மீறி வந்தும் உள்ளார். இந்த நிலையில் பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார். அத்துடன் ஏனைய முஸ்லிம் ஆசிரியைகளையும் அபாயாவுடன் வர வைப்பேன் என்று பலருடன் சென்று மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[8].

Anti-Hindu propagada, blaming RSS - 28-04-2018-

ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு[9]: திருகோணமலை ஆசிரியைகளின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக் களப்பு மாராளுமன்ற சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், இது தொடபில் கலந்துரையாட எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடஎது கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்[10]. இவ்வாறு முகமதிய இணைதளங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்தியர்களைப் ப்றுத்த வரையில் “அபயா” பிரச்சினை தெரிந்திருக்கலாம், ஆனால், நிச்சயமாக, “ஹபாயா” பிரச்சினை தெரியாது. தமிழக மற்றும் தமிழகப் பிரிவினைவாத, கம்யூனிஸ ஊடகக் காரர்களும், இதைப் பற்றி எந்த செய்தியினையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். இனி “இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை,” என்று போட்டு வைத்துள்ளதால், முகமதியர் மற்றும் அவர்களது விசுவாசமான தோழர்கள், இனி செய்தியைப் போட ஆரம்பிக்கலாம்.

© வேதபிரகாஷ்

28-04-2018

Anti-Hindu demo - Kanni 27-04-2018

[1] ஐபிசி.தமிழ், திருமலை பாடசாலை விவகாரம்; பின்னணியில் உள்ளவர்களை கண்டு பிடிக்கவும்!, April 27, 18

[2] https://news.ibctamil.com/ta/internal-affairs/Tirumala-school-affair-

[3] இம்போர்ட்.மிர்ரர், ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, ஹபாயா அதிர்வு!!  கிண்ணியாவில் கண்டன ஆர்பாட்டம்!!, April 27, 2018.09.06.00 PM.

[4] http://www.importmirror.com/2018/04/blog-post_567.html

[5] நியூஸ்.வன்னி, உச்சத்தை தொட்ட முஸ்லிம் ஆசிரியையின் ஆடை விவகாரம்வெடித்தது போராட்டம், on: April 27, 2018.

[6] https://www.newsvanni.com/archives/60791

[7] தீவகம், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் காவாலித்தனமான இளைஞர்களுக்கு எச்சரிக்கை!, on: April 27, 2018

[8]http://www.theevakam.com/2018/04/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/

[9] ஜாப்னா.முஸ்லிம், ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு, 28-04-2018.

[10] http://www.jaffnamuslim.com/2018/04/rss_28.html

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

Sri shanmuga college-purdha enters -in Hindu college

திடீரென்று முகமதிய ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தது:  ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை 7.30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக முழு ஆடையணிந்த ஐந்து முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப் பாடசாலைகளின் வருகையும், அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒழுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது[1]. அந்த வகையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இந்த பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன், பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது[2]. இது காலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்மார்கள் மிரட்டியது பாடசாலை நாகரிகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அத்துடன், அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

 Sri shanmuga college- emphacise no communalism in Hindu college

முகமதிய ஆசிரியைகளின் கணவன்மார் வந்து மிரட்டியது[3]: தொடர்ந்து அவர்கள் கூறியது, “ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும் இப் பிரச்சினையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இன வேறுபாட்டை இவ்வாசிரியர்களால் தூண்டப்படுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்மார்கள் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன், எமது பாடசாலை விதிமுறைகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு மதக்காரணங்களை காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஆரம்ப நிலையில் இப் பிரச்சினையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கின்றோம். இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது,” என குறிப்பிட்டுள்ளனர்[4].

Sri shanmuga college- emphacise no communalism

முகமதியர் ஏதோ ஒரு திட்டத்துடன் இப்பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்: ஆக இதிலிருந்து தெரிவதாவது:

  1. இந்து மகளிர் கல்லூரியில், முகமதிய பெண்களுக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகமதிய கல்லூரியில் அவ்வாறுள்ளதா என்று தெரியவில்லை.
  2. இதுவரை சேலைக் கட்டிக் கொண்டு வந்திருந்த, முகமதிய ஆசிரியைகள், திடீரென்று ஹபாயா / புர்கா / பர்தா அணிந்து வருவோம் என்று, கல்லூரி அதிபர் / நிர்வாகத்திடம் சொல்லியிருக்கின்றனர்.
  3. ஏனிப்படி திடீரென்று செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அது எங்கள் உரிமை, அதனால் செய்யப் போகிறோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.
  4. மறுத்தபோது, எழுத்து மூலம் ஹபாயா அண்ணிந்து வர அனுமதி கோரினர்.
  5. அதையும் மறுத்தபோது, அவர்களது கணவன்மார் வந்து கத்தி பேசி, மிரட்டியுள்ளனர்.
  6. அதனால், அக்கல்லூரி, “இந்து மகளிர் கல்லூரி” என்பதால், அவ்வாறு செய்ய முடியாது, பிறகு, அவரவர் வேவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வர ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
  7. அந்நிலையில் அவர்களது கணவன்மார் மறுபடியும் வந்த வந்து கத்தி பேசி, திட்டி, “விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்ற ரீதியில் மிரட்டியுள்ளனர்.
  8. இதனால் தான், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  9. இதனால், எதிர்மறை விளைவு ஏற்படும் என்றறிந்தவுடன், மதரீயில் பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்பாட்ட,ம் என்று முகமதியர் ஆரம்பித்தனர்.

Muslims threaten Sri shanmuga college

இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது[5]: அதற்கேற்றபடி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன என தெரிவித்துள்ளார்[6]. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது[7]. பாடசாலைகளில் தங்களுடைய கலாசாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்[8]. பிறகு, ஒரு குறிப்பிட்ட கல்லூரியில், அடுத்தவர் எப்படி தங்களுடைய உரிமை என்று பிரச்சினை ஏற்படுத்த முடியும்?

Sri Shanmuga college demo agfainst Muslims - 26-04-2018-

ஹாபாயா அணிந்து வருவேன் என்ற ஆசிரியைகளுக்கு இடமாற்றம் கொடுத்தது: கொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, [ஹபாயா அணிந்தபடி கடமைக்கு செல்லும் ஆசிரியைக்கு[9]], சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்[10]. ஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் 26-04-2018 அன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்[11]. ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்[12]. நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பாடசாலையின் சமய-கலாச்சாரம் பேணப்பட வேண்டும்[13]. ஆசிரியர்கள் பாடசாலைக்குப் பொருத்தமான, பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இதேவேளை இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் 25-04-2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

© வேதபிரகாஷ்

28-04-2018


Sri Shanmuga college

[1] பட்டி.நியூஸ், அதிபருடன் ஆசிரியர்கள், கணவன்மார்கள் முர்ரண்பட்டமையே ஹபாய ;பிரச்சினைக்கு காரணம் இது எந்த ஒரு இனத்திற்கும் எதிரானதல்லஏற்பாட்டாளர்கள், வெள்ளிக்கிழமை, April 27, 2018.

[2] http://www.battinews.com/2018/04/blog-post_839.html

[3] தினப்புயல், திருகோணமலைஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம், April 26, 2018.

[4] http://www.thinappuyalnews.com/archives/152305

[5] குவிக்,நியூஸ்.தமிழ், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[6]  https://www.quicknewstamil.com/2018/04/28/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/

[7]தமிழ்வின், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[8]  http://www.tamilwin.com/community/01/181129?ref=recommended3

[9] பேஜ்.தமிழ், ஶ்ரீ சண்முகா மகளிர் கல்லூரிஹபாயா ஆசிரியைக்கு இடமாற்றம்: பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு!, April 28, 2018.; http://www.pagetamil.com/2661/

[10] குவிக்,நியூஸ்.தமிழ், சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரம்! முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்!, April 26, 2018

[11]https://www.quicknewstamil.com/2018/04/26/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[12] தமிழ்வின், திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஹபாயா விவகாரம்: விசேட கலந்துரையாடல், April 26, 2018.

[13] http://www.tamilwin.com/community/01/181016

பெரியார் பெயரில் அமெரிக்க மாமிசக் கறிக்கடை தாக்குதல் – மீன்கழிவு அபிஷேகம், அமெரிக்காவைத் திட்டி அர்ச்சனை, நோட்டிசுகளால் பூஜை!

செப்ரெம்பர் 25, 2015

பெரியார் பெயரில் அமெரிக்க மாமிசக் கறிக்கடை தாக்குதல் – மீன்கழிவு அபிஷேகம், அமெரிக்காவைத் திட்டி அர்ச்சனை, நோட்டிசுகளால் பூஜை!

kfc attacked in Pondicherry 1

kfc attacked in Pondicherry 1

பெரியார் சிந்தனை கழகம்: பெரியாரின் பெயரில் எத்தனை கழகங்கள் இயங்கி வருகின்றனவோ தெரியவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தை பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது, என்று புதுச்சேரியில் நடந்த சிறிய நிகழ்ச்சியை இணைதளத்தில் செய்தியாக பார்த்தவுடன், “பெரியார் சிந்தனை கழகம்” பற்றி தேடிப் பார்த்தோம், ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆதித்தமிழர் கொடி

ஆதித்தமிழர் கொடி

ஆக திராவிடக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், பகுத்தறிவு பெரியார் திராவிடக் கழகம், பெரியார் பாசறை, பெரியார் சிந்தனையாளர்கள் கழகம், என்பது போல, இந்த “பெரியார் சிந்தனை கழகம்” முளைத்துள்ளது போலும்!

திக கொடி

திக கொடி

அம்பேத்கர், பெரியார் போன்ற பெயர்கள், உருவங்கள், சிலைகள் இன்றளவில் சின்னங்களாக, பிரச்சார அடையாளங்களாக, சித்தாந்த வியாபார முத்திரைகளாக, வணிக குறிகளாக மாறிவிட்டது தாராளமாக தெரிகிறது.

pdk-flag

pdk-flag

அத்தகைய அடையாளங்களை தாங்கள் உபயோகப்படுத்தினால், தங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையும் உள்ளது என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போலும்.

இலங்கைக்கு ஆதரவாக .நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் பல்டி! (ஆகஸ்ட்.2015): இலங்கை விவகாரத்தில் புதிய திருப்பமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அந்நாட்டுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் இலங்கை மீதான விசாரணையை வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரப்படும் என அமெரிக்காவின் மத்திய, தெற்காசிய விவகாரங்கள் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிஷா பிஸ்வால், கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது[2]: ஜெனீவாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநாட்டில் இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு ஆதரவு தரப்படும். இலங்கை அரசுடனான நல்லுறவைப் பேணும் வகையில் இந்த தீர்மானம் அமையும். இலங்கையில் தற்போதைய சூழலில், வேற்றுமைகளை அகற்றி சமரசம் மலர ஏராளமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அந்த வகையிலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இவ்வாறு நிஷா பிஸ்வால் கூறினார். இச்செதி வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது.

kfc attacked in Pondicherry 2

kfc attacked in Pondicherry 2

புதுச்சேரியில் கே.எப்.சி உணவகம் தாக்கப்படல் (24-09-2015)[3]: இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதும் என்று, ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி காந்தி வீதி-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில்,  இயங்கி வரும் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தில் இன்று பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த கண்ணாடிகள், கதவுகள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்தனர்[4]. மேலும் அங்கிருந்த மீன் கழிவுகளை உணவகம் மீது கொட்டினர். மேலும், உள்ளே இருந்த மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்[5].

kfc attacked in Pondicherry 3

kfc attacked in Pondicherry 3

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டவர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவின் நிறுவனமே தமிழகத்திலிருந்து வெளியேறு என்றும் முழக்கமீட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், கடைக்கு சிக்கன் சாப்பிட வந்திருந்த வெளிநாட்டினர் உள்ளிட்டோர் அச்சத்தில் வெளியேறினர்[6]. பின்னர், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்[7]. இப்படியொரு கலாட்டா செய்ய 5 பேர் போதும் போலும்! இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சிறிய செய்தியை விகடனும் அப்படியே போட்டுள்ளது[8]. மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்[9]. விரைந்து வந்த போலீஸார் தேடி வருகின்றனர் என்பதே வேடிக்கையாக இருக்கின்றது. சிசிடிவியில் ஒன்றும் பதிவாகவில்லையா? சென்ற வாரம், கோவையில், நாம் தமிழர் கட்சியினர் இத்தகைய உணவகத்தை முற்றுகையிட்டு, கைதாகினர்.

kfc attacked in Pondicherry 4

kfc attacked in Pondicherry 4

13-09-2015 அன்று கோவை கே.எஃப்.சி உணவகத்தை தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்[10]: கோவையில் கே.எஃப்.சி உணவகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 26 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து கே.எஃ.ப்சி நிறுவனத்தின் ஆர்.எஸ்.புரம் கிளையை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வன் (எ) அப்துல்வகாப் தலைமை வகித்தார். இதில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக இலங்கையில் உள்நாட்டு விசாரணை நடத்தினால் போதும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்[11].

பெரியாரைக் காப்போம்

பெரியாரைக் காப்போம்

விளம்பரத்திற்கு இவ்வாறு செய்யலாம் போலிருக்கிறது: பெரிய ஊடகங்களே, இன்றளவில், செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றன. இந்தியில் பேசியதைத் திரித்தி, ஆங்கிலத்தில் வெளியிட்டு பிரச்சினையாக மாற்ற முயற்சித்துள்ளனர், அது தொடர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இலங்கைப் பிரச்சினை, ஒரு உணர்ச்சிப்பூர்வமானது. அவ்விசயத்தில், யாராவது எதிராக மூச்சுவிட்டல் கூட, தமிழ்-விரோதி என்று கிளம்பி விடுவர். பெரியாரின் 137வது பிறந்தநாளை ஐநா சார்பாக வீரமணி மாநாடு நடத்தினார். ஆனால், அதே பெரியார் சின்னத்தை, இன்னொரு கூட்டம், அமெரிக்காவுக்கு எதிராக உபயோகப்படுத்துகிறது. மாட்டுக்கறி தடை என்றால், மாட்டுக்கறி சாப்பிட்டார்கள்; உண்ணாவிரதம் என்றால் உண்ணும் விரதம் கொண்டாடினார்கள்; ஆனல், இப்பொழுது கறிக்கடையை ஏன் பெரியார் பெயரில் தாக்குகிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக .நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் பல்டி!, Posted by: Mathi, Published: Thursday, August 27, 2015, 7:56 [IST].

[2] http://tamil.oneindia.com/news/srilanka/major-shift-us-policy-backs-sri-lanka-s-own-war-crimes-probe-234334.html

[3] ஆர்த்தி, கே.எப்.சி உணவகத்தை அடித்து நொறுக்கிய பெரியார் சிந்தனை கழகம்!, சென்னை, வியாழன், 24.2015.23.56.

[4] http://www.pathivu.com/?p=43510

[5] http://puducherrynews.com/?p=29648

[6] புதுச்சேரி செய்திகள், இலங்கை பிரச்சனையில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு: கேஎப்சி உணவகம் மீது திடீர் தாக்குதல், Posted by Puducherry News on September 24, 2015.

[7] யாழ், .நாவில் அமெரிக்கத் தீர்மானம்! புதுச்சேரியில் அமெரிக்க உணவகம் அடித்து உடைப்பு, Started by தமிழரசு, 10 hours ago

[8] http://www.vikatan.com/news/article.php?aid=52829

[9] http://www.yarl.com/forum3/topic/163540-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

[10] தினமணி, கே.எஃப்.சி உணவகம் முற்றுகை:26 பேர் கைது, By கோவை, First Published : 14 September 2015 03:21 AM IST.

[11]http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2015/09/14/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8826-%E0%AE%AA/article3027086.ece

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன் – இப்படி விஷமத்தனமாக செய்திகளை வெளியிடுவது ஏன்?

ஜூன் 2, 2013

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன் – இப்படி விஷமத்தனமாக செய்திகளை வெளியிடுவது ஏன்?

DG12_09_27_220.jpg

பெருமைப்படவேண்டிய விஷயத்தைக் குதர்க்க நோக்கத்தோடு வெளியிடும் நோக்கம் என்ன?: சிக்காகோவில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் UIC (University of Illinois at Chicago[1]) அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது[2] என்று ஏதோ ரகசியத்தைக் கண்டுவிட்டது போல சில இணைதளங்கள் வெளியிட்டுள்ளன:

ஜாப்னா இந்து காலேஜ், தனது இணைதளத்திலும் பெருமையாக வெளியிட்டுள்ளது[6]. அக்கல்லூரியில் 1968-75 ஆண்டுகளில் படித்த மாணவன், 29-05-2013 அன்று வெள்ளைமாளிகை நிகழ்சியில் பாராட்டப் பட்டவர் என்று விவரங்களைக் கொடுத்துள்ளது[7].

Sivalingam Sivananthan, professor of physics

கௌரவிக்கப் பட்ட விஞ்ஞானி: விருது அந்த பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்தில் வெளிவந்துள்ள விவரத்தை, ஆங்கில இணையத்தளமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது[8], என்று குறிப்பிட்டு, உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பது தெரிகிறது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி அண்மையில் கெளரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப் பட்டுள்ளார். கடந்த 30 ம் தேதி சிவலிங்கம் சிவநாதனுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தமது அறிவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த நிகழ்சியின் விடியோவை இங்கு காணலாம்[9].

???????????????????????????????

உயர்ந்த தொழிற்நுட்பம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்: உயர்ந்த தொழிற்நுட்பம் கொண்ட வெப்பங்காக்கும் கருவியை உருவாக்கியவர் சிவநாதன். போலிங்புரூக், Ill என்ற இடத்தில், சிவநாதன் லெபோரட்டரீஸ் இன்க் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கண்ணுக்குப் புலப்படாத சிவப்புநிறக்கற்றை தொழிற்நுட்பம், கற்றை அலைகளைக் கண்டறிதல், திடப்பொருள் ஆராய்ச்சி முதலியவற்றில் இந்த ஆராய்ச்சிக் கூடம் ஈடுபட்டுள்ளது. ஒளிக்கற்றை ஆராய்ச்சியில் இது மிகவும் அடிப்படையானது மற்றும் முக்கியமானது என்பதால், இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னுடைய கண்டுபிடிப்புகளால் ஆராய்ச்சி மற்றும் தொழிற்சாலை உற்பத்தி இவைகளுக்கிடையே உள்ள தூரத்தைக் குறைக்க வழிசெய்கிறார் என்று பாராட்டப்படுகிறார்[10].

Sivanathan Laboratories

இலங்கைத் தமிழர் பாராட்டப் பட்டுள்ளார்: அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன், அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார். பேராசிரியர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க், இப்படியான அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணுமின் தொழிற்நுட்பம் தொடர்பில் புகழ்பெற்றவர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவருக்கு சகல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது தமது கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

Sivanathan - Lankasri mischief

விஷமத் தனத்தைத் தூண்டும் தமிழ் இணை தளங்கள்: உண்மையினைத் திரித்து, இப்படி துவேஷம் உண்டாக்கும் வகையில் இந்த தமிழ் இணைதளங்கள் செய்துள்ளது கண்டிக்கப்பட வேண்டியதாகும். வழக்கம் போல, இலங்கைத் தமிழனா, அமெரிக்கத் தமிழனா, தமிழ் பேசும் அமெரிக்கனா, அமெரிக்கக் குடிமகனா என்றெல்லாம் கற்பிப்பதை விட, இலங்கை வம்சாவளி என்று பெருமைப்படுவதை விடுத்து, இப்படி ஏன் வெளியிட வேண்டும்.  லங்காஶ்ரீ நியூஸ் என்ற ஆங்கிலத் தளமும், “US Honours Sivalingam Sivananthan for Technology Contribution to Raid in Which Osama Bin Laden was Killed [Saturday, 01 June 2013, 08:34.01 AM GMT +05:30 ]”, என்று வெளியிட்டுள்ளது[11]. உள்ளே அப்படியே ஆங்கிலத்தில் உள்ளவற்றைக் காப்பியடித்துப் போட்டுவிட்டு, தலைப்பு மட்டும் அப்படி போட்டுள்ளது. போதாகுறைக்கு, ஒசாமா பின் லேடனும், சிவநாதனும் சேர்ந்திருப்பது போல புகைப்படத்தையும் போட்டுள்ளது. தமிழ்.நெட்.காம் சரியாகப் போட்டுள்ளது[12].

 

மனைவியை விடுத்து படிக்க வந்த சிவநாதன்: சிவநாதன் 1983ல் தனது ஊரில் கலவரங்கள் ஏற்பட்டபோது கலங்கினான், ஏனெனில் அப்பொழுதுதான், இல்லினாயிஸ் பல்கலைகழகத்தில் நுழைவு தேர்விற்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தான்[15]. 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அப்பொழுது தனது மனைவியை தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் தோல்வியடைந்தான். “என் மனைவி எங்கு இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மறைந்திருக்கிறாளா என்பதும் தெரியவில்லை”, என்று கவலைப்பட்டார். பிறகு அவள் உயிரோடு இருந்ததை அறிந்து கொண்டார்[16]. இப்படி கஷ்டப்பட்டவர் தாம், இன்று கடின உழைப்பினால் முன்னேறி, விஞ்ஞானியாக புகழைப் பெற்றுள்ளார். ஆகவே, பாராட்ட மனமில்லை என்றால், சும்மா இருந்து விட்டு போகலாம். அதற்கு பதிலாக இப்படி விஷமத்தனத்தை செய்ய வேண்டாம்.

 

வேதபிரகாஷ்

© 02—06-2013


[7] Dr.Sivalingam Sivananthan, a distinquished old boy of Jaffna Hindu College (1968 -75) and currently professor of physics at the University of Illinois Chicago and founder of Sivananthan Laboratories in Bolingbrook, USA, has been named a White House Champion of Change, an honour that recognizes immigrant entrepreneurs. He was given this honor at a ceremony at the White House on May 29th 2013.

[10] Sivananthan is the founder of the high-tech, Bell-Labs-styled incubator, Sivananthan Laboratories, Inc. in Bolingbrook, Ill. The Laboratories’ focus is on infared technology, radiation detection, materials research and biosensors.Because, at its most fundamental, MCT technology is about transforming light into electricity, Sivananthan is also leading an effort to develop next-generation solar power. To that end, he helped found InSPIRE (the non-profit Institute for Solar Photovoltaic Innovation, Research, and Edu-training), whose mission is training Illinois’s workforce and exciting Illinois undergraduate and high school students to create a renewable energy and solar eco-system in Illinois.In Sivananthan Laboratories Sivananthan is promoting economic growth by fostering cutting-edge, fundamental research and development that bridges the gap between academia and industry.

[15] In the summer of 1983, the microphysics pioneer at the University of Illinois at Chicago was preparing to take his preliminary examination at the university to begin his doctoral dissertation. That’s when he heard that riots had begun back home in Sri Lanka – the start of a civil war that only ended in 2009. Sivananthan wanted to head back right away. He had tried and failed to get in touch with his wife who was in the northern part of the country, the center of the violence. “We had not managed to make any connection with her, I didn’t know if she was hiding, where she was,” he said. http://news.medill.northwestern.edu/chicago/news.aspx?id=182831

கிழக்கிலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதை எதிர்க்கும் தமிழர்கள்!

மே 24, 2013

கிழக்கிலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதை எதிர்க்கும் தமிழர்கள்!

Notice_at_urugamam_281x351_bbc_creditஇந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம்:  முஸ்லிம்களுக்கு வீடுகள் – கிழக்கிலங்கையில் தமிழர்கள் எதிர்ப்பு: இலங்கையின் மட்டக்ப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்[1]. இந்திய அரசின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் போது அதில் முஸ்லிம்கள் உள்வாங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக காவல்துறையினர் கூறுகிறார்கள்[2]. கைதுசெய்யப்பட்ட இராஜபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி யோகராசா மற்றும் உறுகாமத்தைச் சேர்ந்த பரமசிவம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் என்னென்னவோ நடக்கிறது, யாரும் கண்டு கொள்வதில்லை.

???????????????????????????????இரண்டு முறை ஆதாயம் பெறும் முஸ்லிம்கள்: மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிங்கள கிராமமான மங்களகம, தமிழ் கிராமமான பெரியபுல்லுமலை மற்றும் முஸ்லிம் கிராமமான உறுகாமம் ஆகிய இடங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் (15-05-2013) புதன்கிழமை இடம்பெற்றன. இதன்போது பெரியபுல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய இடங்களில் இலங்கைக்கான இந்தியத் தூதர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இந்திய உதவியுடனான வீடுகள் கட்டும் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்படுவது தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் இந்த இரு தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். உறுகாமம்வாழ் தமிழ் மக்கள் எனும் பெயரில் வெளியாகியுள்ள அந்தத் துண்டுப் பிரசுரங்களில் இது இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமியக் குடியேற்றத் திட்டமா என்று கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக 1990 ஆம் ஆண்டு உறுகாமத்திலிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஏறாவூர் பகுதியில்  ஈராக் அரசாங்கத்தினால் சதாமுசைன் கிராமம் என்ற பெயரில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளது[3]. வீடுகளும் காணிகளும் வழங்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

Damaged Hindu temple Sri Lanka5 by Muslimsநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து இரண்டாவது தடவையாக சலுகை  பெறுவது: யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி 25 முஸ்லீம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து நேற்றைய  தினம் (22.05.2013) சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில் துண்டுபிரசுரங்களை வழங்கியுள்ளனர்.  ஆனால் இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கென இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடுகளை இன நல்லிணக்கம் என்றபெயரில் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து இரண்டாவது தடவையாக குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள உறுகாமம் வாழ் தமிழர்கள் இது சம்பந்தமாக ஒரு துண்டுபிரசுரத்தையும் வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட துண்டுபிரசுரங்களை நேற்று சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலமையிலான குழுவினரிடம் வழங்கியுள்ளனர்[4].

Damaged Hindu school - for buiding mosqueதமிழர் நிலத்தை மசூதி கட்ட கொடுத்தது: கிழக்கு மாகாணத்தில், அம்பாரை மாவட்டத்தில் சம்மந்துறையில் கொரக்கார் என்ற கிராமத்தில் தமிழரது நிலத்தை கையகப்படுத்தி, மசூதி கட்டுவதற்கு கொடுக்கப்பட்டதை தமிழர்கள் எதிர்த்தனர்[5]. முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே ஏற்பட்ட மதச் சண்டை மற்றும் கலவரங்களிமனால், 1990களில் 250 தமிழர் குடும்பங்கள், இங்கிருந்து வெளியேற நேர்ந்தது. சமீபத்தில் தமிழர்கள் திரும்ப வந்து ஒரு போலீஸ் ஷ்டேசனை கட்ட உத்தேசித்னர். கே. தர்மலிங்கம் குடும்பத்தினர் கொடுத்த நிலத்தில் ஒரு கூட்டுறவு சங்கத்தையும் நிறுவ ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அந்த நிலம் அபகரிக்கப்பட்டு அங்கு ஒரு மசூதி கட்ட ஏற்பாடு நடக்கிறது. ஏற்கெனவே 500 மீட்டர் தொலைவில் இரண்டு மசூதிகள் உள்ளன. தமிழர்களிடையே சமரசம் செய்யும் மற்றும் வளர்ச்சிற்காக பாடுபடும் தலைமை இல்லாததால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகின்றன[6].

Distribution_of_Languages_and_Religious_groups_of_Sri_Lanka_1981தமிழ் பேசுபவர்கள் தமிழர்  ஆவார்களா இல்லையா  –  இலங்கையில் ஏன் இப்படி குழப்பம்:  இப்படி செய்திகள் வருவது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், இன்னும்-இன்றும் தமிழர்கள் தாங்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளமல் இருக்கிறார்கள் என்பதுதான். ஆறுமுக நாவலர் பிறந்த மண்ணில் தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் என்று அறியப்படாமல் அல்லது அடையாளம் காணப்படாமல், முஸ்லிம்களுடன் போராடி வருவது என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை.  இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக மற்ரும் தமிழ் ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை.

Damaged mosqueஇலங்கையில் தமிழர்கள் ஏன் இந்துக்கள் போல செயல் படவில்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்றும் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிரித்து வைத்துக் கெடுத்தனர்[7]. “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் மற்றும் இலங்கையில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

PrabhakaranEscapePlans-May20,20101990களில் ஏற்பட்ட பிளவு: அக்டோபர் 1990ல் பிரபாகரன் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களை ஜாப்னாவிலிருந்து வெளியேரச் சொன்னதால், முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடுள்ளது. தமிழ் பேசும் இந்துக்கள் மற்றும் கிருத்துவர்கள் கூட சேர்ந்து வாழாமல், தங்களுடைய அடையாளத்தைத் தனியாக வைத்துக் கொள்ளத் தீர்மானித்தனர்.  இதனால் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் [The Sri Lanka Muslim Congress (SLMC)] என்ற அரசிய சக்தியை உருவாக்கிக் கொண்டனர். 2002 பிறகு மறுபடியும் பிரச்சினை ஏற்பட்டது. வடகிழக்கில் புலிகள் [Liberation Tigers of Tamil Eelam (LTTE)] ஆட்சி செய்தாலும் அவர்கள் தமிழர்களை இலங்கை அரசு நடத்துவது போலத்தான் நடத்தியது. கிழக்கில் உள்ள முஸ்லிம்கள், விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் முதலியோரை மிரட்டி பணம் வசூலித்து வந்தது. இப்படி தொடர்ந்து நடந்த நிகழ்சிகளால் குழுக்களுக்குள் அமைதி இல்லாமல் இருந்தது[8]. முஸ்லிம்கள் தனித்திருப்பது என்பது கட்டாயமானது. ஆகவே, முஸ்லிம்களைப் போல இந்துக்களும் தங்களது பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

seeman-kapeleswarar-templeதமிழ்பேசும் இந்துக்கள் கிறிஸ்தவர்களிடமும் ஜாக்கிரத்தையாகத் தான் இருக்கவேண்டும்: கிருத்துவர்கள் தங்களது ஆதாயத்திற்காகத் தான், அவர்கள் தமிழர்களுடன் அடையாளம் காண விழைகிறார்கள். ஆனால், மற்ற விஷயங்களில் தனித்துதான் தங்களது மத உணர்வோடு இருக்கிறார்கள். இந்தியாவில் கூட செபாஸ்டியன் சீமான் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன் என்று[9], தனது கிறிஸ்தவ கூட்டத்தாருடன் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். கனடாவில் இந்து கோயில்களை சுயநலத்திற்காகத்தான் உபயோகப்படுத்திக் கொண்டு, கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்தனர்[10]. தமிழ் இந்துக்களுக்கு யாரும் ஆதரவாக வரமாட்டார்கள். இந்தியர்கள் வரலாம் ஆனால், அவர்களையும் செக்யூலரிஸ்டுகள் “கம்யூனலிஸ்டுகள்” என்று மிரட்டி வருகின்றனர். ஒருமுறை இலங்கைத் தமிழர் “இந்துக்கள்” என்று சொல்லிக் கொண்டு பிஜேபி தலைவர்களைச் சென்று பார்த்தனர். ஆனால் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

24-05-2013


[2] பிபிசி தமிழ், கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 மே, 2013 – 11:18 ஜிஎம்டி

p>[6] Chammaanthu’rai Tamils, Muslims oppose land appropriation causing tension[TamilNet, Friday, 08 June 2012, 23:48 GMT].Tamils and Muslims at the Koarakkar village of Chammaanthu’rai in Ampaa’rai district of the Eastern province, oppose an appropriation of Tamil land for the construction of a mosque that causes tension between communities. 250 Tamil families of the village were displaced in 1990s after communal disturbances between Tamils and Muslims. When the families returned recently, they have found some of their lands appropriated for the construction of a police station. In addition, a land that had been earlier allotted for the construction of a cooperative society by the family of K. Tharmalingam, has been now appropriated for the construction of a mosque, despite the presence of two more mosques within 500 meters. Both the Tamils and Muslims of the village in the pre-dominantly Muslim division of Chammaanthu’rai are worried about such activities causing disharmony. Lack of a genuine arbitrating agency from the point of nation-building of the Tamil speaking people is the problem, the people said.  The late Mr. Tharmalingam allotted his private land when there was a need to build a cooperative society for the village.  The Tamil families of the village largely come from the washermen community. The appropriation of lands for the police station has also affected many Tamil families from resettling.

தமிழகம் மூலம் போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளதா?

ஓகஸ்ட் 29, 2010

தமிழகம் மூலம் போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளதா?

தீவிரவாதம் போதைமருந்து, ஆயுத சப்ளை: ஜேன்ஸ் பாதுகாப்பு வாரப்பத்திரிக்கை என்பதன்படி எல்.டி.டி.ஈ.யின் போதை மருந்து கடத்தல் வியாபாரம், அமெரிக்கா மற்று கனடா நாடுகளில் அதிக அளவில் இருப்பதாகக் கூறுகிறது[1]. இது எல்.டி.டி.ஈ.யிற்கு, ஆண்டிற்கு  USD 200-300 million வருவாயைக் கொடுக்கிறது. இது வெடிகுண்டுகள், ஆயுதங்கள் முதலியவற்றை வாங்க உபயோகப்பட்டது[2]. இதைத்தவிர, அமெரிக்காவின் போதை மருந்து கட்டுப்பாட்டகம், 1980களினின்றே இது தனது உள்நாட்டு கலகம் / போர் முதலிய காரியங்களுக்குத் தேவையான பணத்தை போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் மூலம் பெற்றுவருகிறது என்று கூறியுள்ளது[3]. உலகத்திலேயே ஆப்கானிஸ்தானில்தான் 70% மேலான போதை மருந்துக்கு வேண்டிய பொருட்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை இந்தியாவின் மூலம், அதன் மூலமாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றது. சென்ற வருடத்தில் அதன் வீழ்ச்சிற்குப் பிறகு, இது குறையிம் என்று எதிர்பார்க்கப்பட்டது[4]. இலங்கையில் விடுதலைப் புலிகளின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடத்தப்பட்டு வந்த போதை பொருள் கடத்தல் குறைந்து வருகிறது, என்று கருதினாலும், அது கேடமைன் மற்றும் இதர வடிவங்களில் செல்ல ஆரம்பித்துள்ளன[5].

எல்டி.டி.ஈ – ஆப்கானிஸ்தான் தொடர்பு: சர்வதேச அளவில், ஆப்கானிஸ்தானில் தான் அதிகமான அளவில் போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, பல்வேறு வழிகளில் கடத்தப்பட்டு, உலக நாடுகளில் செயல்படும் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி, பணமாகின்றன. இந்த பணத்தை கொண்டு, பயங்கரவாத கும்பல்கள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன.  இதில் தமிழகத்தில் இருந்த ச்லருக்கும் தொடர்பும் இருந்தது.

குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல்[6]: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து, சென்னை வழியான போதை மருந்து கடத்தல் குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இலங்கையில் 2008ம் ஆண்டு மத்தியில் உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடந்தது. வாழ்வா, சாவா என்ற முடிவோடு புலிகள் இலங்கை ராணுவத்தை எதிர்கொண்டனர். இந்த கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிகமான அளவில் போதை பொருட்கள் கடத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்,  மலேசியாவிற்கு செல்ல இருந்த சிவகங்கையைச் சேர்ந்த மாசிலாமணி (42) என்ற பயணியிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கேடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரும்பாலும் ஸ்ரீலங்கையைச் சேர்ந்த ஆசாமிகள் சிக்குகின்றனர்: சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பரியல் ரியானோ (29) என்ற பெண்ணிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று  கிலோ ஹெராயின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2008, ஆகஸ்ட் மாதத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (35) என்பவரிடம் இருந்து  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு 2008ம் ஆண்டு முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கை உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இப்போரில், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, புலிகளின் சாம்ராஜ்யம் அங்கு முடிந்தது. சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடந்து வந்த போதை பொருள் கடத்தல் குறைந்துள்ளது.

தமிழகத்தில் குறைந்தால், கேரளாவில் அதிகமாகிறது: அத்தகைய போக்கை 2005லேயே, அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்[7]. இதனால், எல்.டி.டி.ஈ.யினர் தமக்கு தமிழகத்தில் உள்ள வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவு கூட்டங்களை பாதிக்க எல்.டி.டி.ஈ.யினர் விரும்பவில்லை. குறிப்பாக, தமிழகக் கூட்டணி ஆட்சியில், திமுக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரிக்கவேண்டியிருந்தது, ஆனால், காங்கிரஸ் எதிர்க்கவேண்டியிருந்தது. அதுமட்டுமலாது, கேரள தொடர்பு, முஸ்லீம்களை கூட்டில் சேர்த்துக் கொள்ள ஏதுவாயிற்று. ஆனால், ஸ்ரீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்க ஆரம்பித்து விட்டது.

இந்திய போதைக் கட்டுப்பாட்டுத் துறை சிறப்பாகச் செயல்படுவது: தேசிய போதைமருந்து தடுப்பகம் மற்றும் சென்னை விமான நிகையத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரிகல் பலதடவை போதை மருந்து கடத்தல்காரர்ககளை கையும் களவுமாகப் புடித்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவரை கேட்டபோது, “சென்னை வழியாக போதை பொருட்கள் கடத்துவது குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கெடுபிடிகளால் கடத்தல் கும்பல், தங்களின் கடத்தலை சென்னையை தவிர்த்து, வேறு விமான நிலையங்களின் வழியாக நடத்திக் கொண்டிருக்கலாம். ஒரு சில ஆசிய நாடுகளில்  பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாலும் கடத்தல் குறைந்திருக்க வாய்ப்புண்டு’ என்றார். அவர்கள் முறைந்துள்ளது என்றுதான் சொல்கிறார்களே தவிர, இல்லை என்று சொல்லவில்லை. சமீபத்தில் தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகள், அவர்களது இருக்கும் தன்மையினைப் புலப்படுத்துகிறது[8].

தமிழகத்தில் எல்.டி.டி.ஈ.யின் வாரிசு / அதிகாரச் சண்டை நடக்கிறதா? எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது போல இருக்கிறது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் இல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[9]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[10], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முததலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.


[1] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal.

[2] The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.

[3] Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous Mix, Statement of Steven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html

[4] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of India http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw

http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms

[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=59432;

ஆகஸ்ட் 29,2010 சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட போதைப் பொருள் ஹெராயின் வகையைச் சேர்ந்ததா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் குறித்து போதைப் பொருள் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72853

[6] தினமலர், குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல், ஆகஸ்ட் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72601

[7] Heroin smugglers avoid Tamil Nadu, prefer Kerala as landing point (April 3, 2005)

By K.T. Sangameswaran ; CHENNAI, APRIL 2. Smugglers of heroin, meant for Sri Lanka, are now choosing Kerala as the landing point, going by the haul made by the Narcotics Control Bureau (NCB) in the last one year. The smugglers seem to avoid Tamil Nadu and even if their crossing the State is inevitable, they ensure that their exposure is minimal, say narcotics control authorities.

“Avoid Tamil Nadu to the extent possible for landings and transit of the drugs. Don’t be in the State for long.” This seems to be the instruction of the druglords to their operators, Shankar Jiwal, NCB’s south zonal Director, told The Hindu .

http://www.hindu.com/2005/04/03/stories/2005040306420400.htm

[8] Editor, Asian Tribune, LTTE down, but not out; Tamil Diaspora keeps them alive , Mon, 2010-06-21

http://www.asiantribune.com/news/2010/06/21/ltte-down-not-out-tamil-diaspora-keeps-them-alive

[9] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html

[10] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

ஜூன் 13, 2010

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

1991லிருந்து தொடர்ந்து வரும் இந்திய-ஸ்ரீஇலங்கை நாடுகளின் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்: இருநாடுகளும் 1991லிருந்து அமோகமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனவாம்[1], அவை நன்றாகவும், உருப்படியாகவும் இருந்தனவாம். இந்தியா இத்தகைய நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த இருதரப்பு நல்லுறவை மேன்மைபடுத்தி, பலபடுத்த வேண்டுமாம். உயர்ந்துவரும் இந்தியா, இலங்கையின்மீது எந்தவிதமான சரத்துகளையும் திணிக்காமல் / முட்டுக்கட்டைகள் போடாமல், இலங்கைத் தமிழர்களுடைய துன்பங்கள் குறிப்பிட்ட வரைமுறைகளில் செயல்பட்டு மேன்பட, இலங்கை தலைமையினை உற்சாகப்படுத்தவேண்டுமாம். ஆமாம், இதெல்லாம் 12-06-2010 அன்றைய “தி ஹிந்து” நாளிதழின் தலையங்கத்தின் சாராம்சமாகும்[2]. பிறகு ஏன் இவ்வாறெல்லாம் நடந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. தி ஹிந்து நளிதழும், ஏதோ பொடி வைத்து எழுதியுள்ளதா, நடந்ததை நியாயப்படுத்தியுள்ளதா, இல்லை நடந்தது நடந்து விட்டது, இனிமேலாகிலும் நல்லதை எதிர்பார்த்து பயனிப்போம் என்ற முறையில் சொல்லப்பட்டதா ஏன்று நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில், அத்தகைய அமோகமான பேச்சு வார்த்தைகள் நடந்திருந்தால், இம்மாதிரியாக மக்கள் உயிரிழந்திருக்க வேண்டாம், வீடுகளை-உடமைகளை அழிவிற்குட்படுத்தியிருக்கவேண்டாம்……………….

DMK-Rajapakshe-Kanimozhi

DMK-Rajapakshe-Kanimozhi

திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ஸ்ரீலங்காப் பிரச்சினையில் திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம்[3], துரோகத்தனம், முதலியன நாளுக்கு நாள் அளவுகடந்து, பொறுமையின் எல்லைகளைத்தாண்டி கேவலமாக, விரசமாகிக்கொண்டு வருகின்றன[4]. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட திராவிட எம்.பிக்கள், அமைச்சர்கள், முதல் மந்திரி, பிரதம மந்திரி, பின்னின்று ஆட்டிவைக்கும் சூத்திரதாரி, இத்தாலி சோனியா முதலியோருக்கு எந்தவிதமான வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. டில்லியில் மஹிந்தரபக்ஷேவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவது (09-06-2010), சென்னையில் கொடும்பாவி எரிப்பது என்ற விதத்தில் தான் அவர்களின் வீரத்தின் தன்மை உள்ளது. வெறும் வெட்டிப்பேச்சுகள், போலித்தனமான எழுத்துகள், என்றுதான் உள்ளன[5]. இத்தகைய முரண்பாடுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டினால், மற்றவர்களை மிரட்டுவது என்ற நிலை வருகிறது. தமிழர்களின் துரோகி என்று ஏசுதல், வசவாடுதல், அவதூறு பேசுவது என்ற ரீதியில் மாறுகிறது. இத்தகைய எழுத்து-பேச்சுத் தீவிரவாதங்களுடன் தான், திராவிட-தமிழ்-சித்தாந்தி மறவர்களும் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

Raja-kani-Tamil-MPs

Raja-kani-Tamil-MPs

முன்பு கொழும்புவில் எப்படி எம்பிக்கள் சென்று பேச்சு வார்த்தைகள் நடத்தினரோ, அதே ரீதியில் தான், இப்பொழுதும் நடத்தியுள்ளதாக உள்ளது. “தமிழர் பிரச்சினை” என்பதனால் காங்கிரஸ் சாமர்த்தியமாக, அவர்களை வைத்தே முடிவுக்கு வரும் அளவில் தள்ளியுள்ளது[6]. நாளைக்கு பிரச்சினை –  பேச்சு வார்த்தைகள் தோல்வி, ரூ. 500 கோடிகள் இந்திய அரசு கொடுத்தது, ஆனால் தமிழர்களைச் சென்று அடையவில்லை………………..என்று ஏதாவது பிரச்சினை வந்தால், இலகுவாக ஒதுங்கிவிட வாய்ப்பை மத்திய அரசு (காங்கிரஸ் தலைமை) ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கூட காங்கிரஸ் எம்பிக்களையும் சேர்த்துக் கொண்டுள்ளதால், மாநிலத்திலும், காங்கிரஸின் அதிகாரம் உள்ளது என்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சாமர்த்தியமாக வேலை செய்துள்ளது.

ரஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

ராஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால் கொள்ளையடிக்கத் தயாராக உள்ள கூட்டங்கள்: அப்பாவி மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால், இன்றைய திராவிட சித்தாந்திகள் மற்றும் கருப்பு-சிவப்பு-பச்சை கூட்டங்கள், அதை பறிக்கக் கிளம்பிவிடுகின்றன. சுனாமி நிதியை எப்படி அந்த கிருத்துவக் கூட்டங்கள் ஈவு-இரக்கமின்றி கொள்ளையடித்தனவோ[7], அதைவிட கேவலமாக, இந்த சித்தாந்தி-குழுமங்கள் கொள்ளையடிக்க தயாராக உள்ளனர். சென்னை மாநகராட்சியில், தினமும் ஒரு சாவு என்றால், அதற்கு வாங்கும் லஞ்சத்தில், கவுன்சிலருக்கு பங்கு போகிறதாம். இப்படி இருக்கும் திராவிட கலாச்சாரத்தில், ஏன் இந்த கூட்டங்கள், பிணங்களின்மீது கூட லாப-நஷடக் கணக்குகளைப் பார்த்து அடித்துக் கொள்ளாது? இந்த கேவலமான நிலைதான், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உள்ளது. குவியல்-குவியலாக பிணங்கள், தோண்ட-தோண்ட பிணங்கள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றவாளி மகேந்திரபக்ஷே, தமிழ் மக்களின் உயீரைக்குடித்த எமன்…………………………இப்படி ஏராளமான செய்திகள்…………………பிறகெப்படி, இந்த 14-எம்பி கூட்டம் அந்த எமனுடன், ராக்ஷ்ஸனுடன் கைகுலுக்கி, சிரித்துக் கொண்டு அமுத்தலாக பேச்சு வார்த்தைகள் நடத்துகின்றன? சோம-சுரா பானங்களை குடித்துக் கொண்டு, விருந்துண்ணுகின்றன?

TamilMPs-met-Rajapakse

TamilMPs-met-Rajapakse

கருணாநிதியின் கடிதங்களும், ராஜபக்ஷேவின் வார்த்தைகளும்: பாம்பின் கால் பாபு அறியும்: தில்லிக்குச் சென்று ராஜபக்ஷேவுடன் நானே பேச்சு வார்த்தைகள் நடத்துகிறேன், அவருடைய போலித்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறேன் என்று கருணாநிதி சவால் விடவில்லை. மாறாக, “ராஜபக்ஷே தமது வாக்குறுதிகளினின்று பின்வாங்கிவிட்டார்”, என்று பேச ஆரம்பித்து விட்டார். 80,000  தமிழர்கள் இன்னும் கூடாரங்களில் வசிக்கின்றனர். அவர்கள் உடனடியாக குடியமர்த்தப்படவேண்டும் என்று கடிதம் எழுதிவிட்டேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்[8]. கடிதங்கள் எழுதினால் காரியங்கள் நடக்குமா? மகள்-மகன்-மறுமகன்களுக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்று கடிதம் எழுதிவிட்டு சென்னையிலேயே உட்கார்ந்து கொள்ளாலாமே? அப்பொழுது மட்டும் ஏன் தில்லிக்குச் சென்று சோனியாவிடம் நேரிடையாக பேசவேண்டும், மிரட்டவேண்டும்? போதாக்குறைக்கு ராஜாவைவிட்டு நீரா ராடியாவை வைத்துக் கொண்டு உறவாட வேண்டும். தமிழர்களின் மீது, உண்மையிலேயே அக்கரை இருந்திருந்தால், இத்தகைய ஏமாற்று வேலைகளை செய்யவேண்டாமே? இதைப்போலத்தான் அந்த ராஜபக்ஷேவின் வார்த்தைகளும், வாக்குறுதிகளும். ஏன் அவருக்குத்தெரியாதா, கருணாநிதியைப் பற்றி? பாம்பின் கால் பாம்பறியாதா? இத்தகைய வஞ்சக பேரங்களில், எப்படி தமிழர்கள் மீண்டு வாழ்வர்?

Douglas-met-Manmohan

Douglas-met-Manmohan

காங்கிரஸின் / சோனியாவின் கபட நாடகம்: போர்க்குற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால், விடிவு, முடிவு வந்து விடுமா? ஏன் மன்மோஹன்[9] சிங் அதைப் பற்றி பேசுவதில்லை? மன்மோஹன் சிங் ஏன் பேசுவதில்லை என்று சுதர்ஸன நாச்சியப்பன் ஏன் கேட்கவில்லை? ராஜிவ் காந்தி கொலைக்கரர்களின் சட்டப்படி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில், நளினியை நான் மன்னித்து விட்டேன் என்று சோனியா பேசுவதும், பிரியங்கா வேலூருக்கே வந்து நளினியுடன் ரகசிய பேச்சுகள் வைத்துக் கொண்டு செல்வதும், அறிந்தும் அறியாத மாதிரி காங்கிரஸ்-திமுக கோஷ்டிகள் நடித்திருப்பதும், ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்? ஆட்டிவைக்கும் சோனியா ஒன்று பேசினால், ஜனாதிபதியோ, நீதிமன்றங்களோ, உள்துறையோ என்ன செய்யும்?  இந்த நுணுக்கம் கூடவா, அறிவு ஜீவிகளுக்குத் தெரியவில்லை? பிறகென்ன கருணை மனு பற்றிய பேச்சுகள், அதில்கூட “சீனியாரிடி” உள்ளது, அதன்படிதான் நடவடிக்கை எடுப்போம் என்ற ஒழுக்கமான பேச்சுகள் எல்லாம் ஏன் வருகின்றன?

Duglas-devananda-terrorist-rebel

Duglas-devananda-terrorist-rebel

சோனியாவின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்து, தனது கணவனின் பிண்டத்தைப் பார்த்தபோது, “போதும், இனி நாங்கள் அரசியலிலேயே தலையிட மாட்டோம்”, என்று நொந்து, அஞ்ஞானவாசம் வாழ்வேன் என்று ஏற்பட்ட விசனம், எப்படி இந்தியாவை ஆண்டே தீருவேன் என்று மாறியது என்று காங்கிரஸ்காரர்கள் யோசிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும் அம்மையார் இருந்தால், அவர்களுக்கு பதவிகள் கிடைக்கும், வசதிகள் தொடரும், பணம் கொட்டும் அவ்வளவே. ஆனால், அத்தகைய நுணுக்கத்தை அந்த ஜூலியன் மோரோ தனது புத்தகத்தில் எடுத்துக் காட்டிவிட்டால், அது மாபெரும் குற்றமாகி விடுகிறது[10]. உடனே சோனியா வக்கீல் நோட்டீஸ் விடுகிறார், மிரட்டுகிறார், அந்த புத்தகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விற்பதை தடுத்துவிடுவேன். பிறகெதற்கு நாட்டை ஆட்டிவைக்க வேண்டும் என்ற ஆசை? இந்தியாவை விட்டுச் சென்றுவிடவேண்டியதுதானே? ஆனால், சென்றுவிடுவேன் என்று மிரட்டி, தொடர்ந்து இருப்பதில் தான் உண்மையான நிலையுள்ளது. தனது கணவர் கொலையாளிகளின் கூட உறவுகள் தொடர்ந்தன, பேரங்கள் நடந்தன என்றால் அவற்றின் மர்மம் என்ன? ராஹுல் காந்தி பிரதமரானால் கொன்றுவிடுவோம் என்ற மிரட்டல் இருப்பதினால்தான், சோனியா நளினியுடன் பேரம் பேசுகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது. நளினி மற்றும் முருகனை விடுதலை செய்யப்பட்டால், அவர்கள் இந்தியாவைவிட்டு சென்று விடுவோம், இனி பிரச்சினையிலேயே தலையிட மாட்டோம் என்று உறுதி பெறுவதற்குத்தான் பிரியங்கா மூலம் சோனியா பேரம் பேசியது உண்மையா-போய்யா என்பதை சோனியா மற்றும் காங்கிரஸ்தான் உறுதி செய்யவேண்டும்.

குறிப்பு: கனிமொழியின் ஆடைகள் மாறியிருக்கின்றன. முதலில் சிகப்பு நிறம் சேலை-ஜாக்கெட் என்றுள்ளது, பிறகு அது பச்சைநிற பார்டர் போட்ட வெளிர் மரக்கலர் நிறத்தில் மாறியிருக்கிறது. ஆக,  – இரண்டு முறை (ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில்) அவர்கள் ராஜபக்ஷேவைப் பார்த்து பேசியிருக்கிறார்கள். சிவராஜ் பாட்டீல் மாதிரி ஆடைகளை மாற்றுவதில் தான் கனிமொழி கவனம் செல்லுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. இங்கே, இவ்வளவு வெறுப்பு, காழ்ப்பு, ஆக்ரோஷம், விரோதம், துவேஷம்,…………………முதலியவற்றுடன் பேசினாலும், அங்கு அமைதியாக, நாகரிகமாக, சிரித்துக் கொண்டு, …………………சால்வைகளைப் போத்தி மரியாதை செய்து…………………………………. , முகச்சிரிப்போடு……………..அப்பப்பா, நடிப்பா, உண்மையா………..என்றே தெரியாமல் அளவில்………… அவர்கள் அந்நேரங்களில் பேசிய விவரங்கள் என்னவென்று தெரியவில்லை.


[1] Indian Peace Keeping Force (IPKF) withdrew from Sri Lanka in 1990. In 1991, after the IPKF withdrawal was complete and the LTTE had assassinated former Indian Prime Minister Rajiv Gandhi, India brought its involvement in Sri Lanka’s internal ethnic conflict to a complete halt.

[2] Editorial, Productive Visit, The Hindu dated 12-06-2010. From 1991, successive governments in New Delhi have conducted Sri Lanka policy on sound and constructive lines. The time has come to take the bilateral relationship to a new level by exploring its full potential. As part of this, rising India must – without imposing itself – continue to encourage the Sri Lankan leadership to find a satisfactory resolution to Tamil grievances within an improved devolution framework.

http://beta.thehindu.com/opinion/editorial/article453209.ece

[3] DMK president and Chief Minister M  Karunanidhi on Tuesday 03 Feb 2009 said the LTTE had lost the sympathies of the party way back in 1987 itself as its chief V Prabhakaran was planning to adopt a dictatorial form of government in Tamil Eelam for which they were fighting.

[4] http://timesofindia.indiatimes.com/India/Karunanidhi-lauds-LTTE-as-Sonia-looks-on/articleshow/4507318.cms

After calling LTTE chief Prabhakaran his good friend, Tamil Nadu Chief Minister M Karunanidhi on Monday flip-flopped from his stand, saying India could not forgive the LTTE for assassinating Rajiv Gandhi. http://ibnlive.in.com/news/karunanidhi-flip-flops-says-cant-forgive-ltte/90663-37.html

[5] http://www.thehindu.com/2010/06/08/stories/2010060859770300.htm

http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article449715.ece

[6] சுதர்ஸன நாச்சியப்பன், இந்த 14-எம்பி குழுவில் இருந்திருக்கிறார். பிரபாகரனை எதிர்க்கும் பட்சத்தில், காங்கிரஸ் இலங்கையாட்சியாளர்களுக்கு சாதகமாத்தான் செயல்படும் என்பது நிதர்சனமாகிறது.

[7] ஸெவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கூட்டாத்தார், தடபுடலாக, அமெரிக்காவிலிருந்து மில்லியன் கணக்கில் டாலர்களைப் பெற்று, மிகவும் தரக்குறைவான ஓட்டை வீடுகளைக் கட்டிக் கொடுத்து, சரியாக மாட்டிக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றமே இவர்களைக் கடுமையாக சாடி கண்டித்தது. மறுபடியும் வீடுகளைக் கட்டித்தருமாறு ஆணையிட்டது.

[8] http://beta.thehindu.com/news/national/article450225.ece

[9] http://www.thehindu.com/2010/06/10/stories/2010061057650100.htm

[10] ஜூலியன் மோரோ என்பவர் எழுதிய புத்தகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் அதிக அளவில் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

அமிதாப் – வருவார், ஆனால் வரமாட்டார்!

மே 8, 2010

அமிதாப்புக்கு சீமான் நன்றி
புதன், 28 ஏப்ரல் 2010( 15:56 IST )
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1004/28/1100428066_1.htm

இலங்கையில் நடக்கயிருக்கும் விருது வழங்கும் விழா குறித்து மறுப‌ரிசீலனை செய்வதாக தெ‌ரிவித்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் நன்றி தெ‌ரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களை‌க் கொன்று குவித்த பாசிஸ ராஜபக்சேவுக்கு சர்வதேச சமூகம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அவரை‌ப் போர் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை நீர்த்துப்போகச் செய்யும் எதிர் நடவடிக்கையில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் கை கோர்த்துள்ளது. இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை சென்ற அமிதாப் பாசிஸ ராஜபக்சேவை சந்தித்து விழா குறித்து பேசியதுடன் சிங்களர்களை வெகுவாகப் புகழ்ந்து பேட்டியளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெ‌ரிவிக்கவும், அமிதாப் விருது விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் இயக்கத்தினர் கடந்த ஞாயிறன்று அமிதாப்பின் வீட்டு முன் கறுப்பு‌க் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வீட்டிலிருந்த அமிதாப் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து விவரங்களை‌த் தெ‌ரிந்து கொண்டார். இதுகுறித்து தனது ப்ளாக்கில் எழுதியிருக்கும் அமிதாப், தமிழர்களின் சென்டிமெண்‌ட்டை தான் மதிப்பதாகவும், விருது விழா நடத்துகிறவர்களிடம் இது குறித்து பேசயிருப்பதாகவும், விருது விழா குறித்த முடிவை மறு ப‌ரிசீலனை செய்யவிருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனின் இந்த முடிவுக்கு சீமான் நன்றி தெ‌ரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட மற்ற பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என தனது அறிக்கையில் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமிதாப்-ஷாரூக் வருகையை யாராலும் தடுக்க முடியாது!: இலங்கை

வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 13:59[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/07/iifa-colombo-srilanka-amitabh-bachchan-sharukh.html

இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. கொழும்பில் வரும் ஜூன் 3 முதல் 5 வரை நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வழங்கும் விழாவில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட குழுவினர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வழங்கும் விழா குறித்து இலங்கை அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இத்தகவலை உறுதியாகத் தெரிவித்தார். “அமிதாப், ஷாரூக்கான் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களைப் பங்கேற்க விடாமல் செய்ய சிலர் முயற்சித்தும் வருகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அமிதாப்பும் ஷாரூக்கானும் பங்கேறபார்கள்” என்றார் லக்ஷ்மண் யாப்பா. இலங்கை இப்போது முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவதாகவும், இந்தத் தருணத்தில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் இலங்கையில் நடப்பது, நாட்டின் முகத்தையே மாற்றி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நளினியிடம் இருந்து சிறையில் மொபைல் போன் பறிமுதல்: நான்கு வருடங்களுக்கும் மேலாக உபயோகித்ததாம்!

ஏப்ரல் 21, 2010
நளினியிடம் இருந்து சிறையில் மொபைல் போன் பறிமுதல்
ஏப்ரல் 21,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7278

Front page news and headlines today

வேலூர் : வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைக்குள் மொபைல் போன் சென்றது எப்படி என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின், ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினியின் கணவர் முருகன் மற்றும் ராபர் பயாஸ் உள்ளிட்டபலர், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் 19 ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் நளினி, ‘தன்னை விடுதலை செய்ய வேண்டும்’ என, ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஐகோர்ட் உத்தரவுபடி அறிவுரை கமிட்டி அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால், முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுத்து விட்டது.

பெண்கள் சிறையில் நளினி அறையில் நேற்று காலை 8 மணிக்கு பெண்கள் சிறைசூப்பிரண்டென்ட் ராஜலெட்சுமி, துணை சிறை அலுவலர் லெட்சுமி ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.அப்போது நளினி வைத்திருந்த பையில் ஒரு மொபைல் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நளினி தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போது மேலும் இரண்டு சிம்கார்டுகள் சிக்கின. நளினியிடம், சிறைத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, ‘தன்னிடம் மொபைல் போன் எப்படி வந்தது என தெரியவில்லை’ என்று, நளினி கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போனில் உள்ள சிம்கார்டு மற்றும் இரண்டு சிம்கார்டுகளைக் கொண்டு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நளினி சிறையில் இருந்தபடி பேசியதும், குறிப்பாக வெளிநாடுகளுக்கு அதிகளவில் பேசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நளினியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து நேற்று மாலை 7 மணி வரை முறையாக பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்படவில்லை என, போலீசார் தெரிவித்தனர். நளினிக்கு மொபைல் போன் எப்படி கிடைத்தது, இதற்கு பெண்கள் சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து, சென்னையில் இருந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் நளினியின் கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன் ஆகியோரிடம் மொபைல் போன்கள் உள்ளனவா என்பது குறித்தும், ஆண்கள் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிறைத்துறை காவலர்கள் கூறியதாவது:வேலூர் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் நிலை உள்ளது. குறிப்பாக ராஜிவ் கொலையாளிகள் நளினி, முருகன் சம்பந்தப்பட்டவர்களிடம் பல ஆண்டுகளாகவே மொபைல் போன்கள் இருப்பதும், அவர்கள் அதன் மூலம் பல மணி நேரம் பேசி வருவதும் சிறைத்துறைஅதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில் திடீர் என இந்த பிரச்னை இப்போது கிளம்பி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நளினியிடம் மொபைல் போன் சிக்கியுள்ளதையடுத்து, கடந்த ஒரு மாதமாக பெண்கள் சிறையில் பணியாற்றி வந்த அனைத்து அதிகாரிகள், சிறை காவலர்களிடம் விசாரணை நடத்த சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. பல அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போன், சிம் கார்டுகளை அவர் எத்தனை ஆண்டுகளாக வைத்திருந்தார், யார், யாரிடம் பேசி இருக்கிறார், அந்த சிம்கார்டுகள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் சம்பந்தப்பட்ட மொபைல் போன் நிறுவனங்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விரிவாக விசாரணை செய்து வருகின்றனர். நளினி மொபைல் போனில் பயன்படுத்திய சிம் கார்டு, ஏர்டெல் நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நளினி கனடா, லண்டன் முதலிய இடங்களுக்குப் பேசியது: கனடா, லண்டன் முதலிய இடங்களுக்குப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், யாஅருடன் பேசியது என்ற தகவல்கள் சொல்லப்படவில்லை. நளினியின் வக்கீல் சிறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்காததால், தனது கிளையன்ட் துன்புறுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் வியப்பாகத்தான் உள்ளது.

ஈழத்தமிழர்கள், இசுலாமியர்கள் ராஜபக்சேவை ஏற்றுக் கொள்ளவில்லை தமிழ் தலைவர்கள் அறிவிப்பு!

ஜனவரி 31, 2010

ஈழத்தமிழர்கள், இசுலாமியர்கள் ராஜபக்சேவை ஏற்றுக் கொள்ளவில்லை தமிழ் தலைவர்கள் அறிவிப்பு

விடுதலை, 31-01-2010, பக்கம்.6

http://viduthalai.periyar.org.in/20100131/news23.html

கொழும்பு, ஜன. 31_- நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் வட கிழக்கு மக்கள், மகிந்த ராஜ-பக்சேவின் நான்காண்டு கால ஆட்சியை ஏற்றுக்-கொள்ளவில்லை என்-பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருப்பதாக தமிழ் தேசிய கூட்-ட-மைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரி-விக்-கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்-பின் சார்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா விடுத்-துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரி-விக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்-கப்பட்டிருப்பதாவது:

இலங்கை அதிபர் தேர்-தலில் மகிந்த ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ் _- முஸ்லிம் மக்கள் பெரு-ம-ளவில் மகிந்தாவை ஆத-ரிக்கவில்லை என்பதும் அவரது வெற்றியில் சிறு-பான்மை மக்கள் பங்-கேற்கவில்லை என்பதும் வெளிப்படையாகும். குறிப்-பாக தமிழ் _- முஸ்-லிம் மக்கள் மகிந்தாவின் கடந்த நான்காண்டு கால ஆட்சியை ஏற்றுக்-கொள்ளவில்லை என்பது இந்த தேர்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக் கிறது.

இந்த தேர்தலின் மூலம் தமிழ் – முஸ்லிம் மக்களின் அய்க்கியம் மேலும் வலுவடைந்திருக்-கிறது. தங்களுக்கு எதி-ராக அநீதிகளை இழைத்த அரசுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்-காட்-டியிருக்கிறார்கள். எதிர்-காலத்தில் தாம் இந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தமது பாரம்பரிய இன அடையாளங்களையும், அரசியல் தேவைகளை-யும் காப்பாற்றிக்கொள்ளவும் மீட்டெடுக்கவும் முடியும் என்ற யதார்த்தத்தை அவர்கள் உணர்ந்-திருக்-கிறார்கள்.

இத்தருணத்தில், தமிழ் – முஸ்லிம் மக்களின் இதயங்களை வெல்வ-தற்கு அதிபருக்கு ஏற்-பட்டுள்ள சவாலை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். வெறுமனே பேசிக்-கொண்–டி-ரா-மல் தமிழ் மக்களின் அரசியல் அவ-சியங்களின் தேவையை ஏற்று உன்னதமான ஒரு அரசியல் தீர்வை உரு-வாக்கி அதனை நடை-முறைப்படுத்தும் துணிச்-சலை அதிபர் வெளிப்-படுத்தவேண்டிய தருணம் இதுவாகும்.

கொலை அச்சுறுத்தல் மற்றும் குண்டு வெடிப்-புக்கள் மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்-குரலை வெளிப்படுத்திய தமிழ் பேசும் மக்களுக்கு நன்-றியை தெரிவித்துக்கொள்-வதுடன் தமிழ் – முஸ்லிம் மக்களின் மத்தியில் ஒரு-மைப்பாட்டை பேணிய ஊடகங்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நன்றியையும், பாராட்டுதலையும் தெரி-வித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரி-விக்-கப்பட்டுள்ளது.

இவ்வளவு நடந்த பிறகும், தலைப்பில் “ஈழத்தமிழர்கள், இசுலாமியர்கள்” என்று பிரித்துதன் காட்டப்படுகிறது!

ஆனால், தமிழ் – முஸ்லிம், தமிழ் _- முஸ்லிம் மக்கள், தமிழ் பேசும் மக்களுக்கு, …………..என்ற பிரயோகங்களும் நடுவில் வருகின்றன!

ஏற்கெனவே, ஊடகத்தார் அவ்வாறு பித்துக் காட்டியதை நான் பலமுறை எடுத்துக் காட்டிவிட்டேன்.

இப்பொழுது என்ன, “தமிழ் பேசும் மக்கள்” எல்லோரும் அதே மாதிரி செயல்படப் போகின்றனரா அல்லது –

தமிழ் பேசும் -இந்துக்கள்

தமிழ் பேசும் -முஸ்லிம்கள்

என்று செயல்படப் போகின்றனரா?