ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)
சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை கண்டு பிடிக்க வேண்டும்: சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்[1]. திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் 26.04.2018 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்ததாவது, “இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரட்சனையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த வேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரட்சனையை பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன”. தமிழக அரசியல்வாதியின் பேச்சைப் போலவே இவர் பேச்சு இருக்கிறது.
ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: இம்ரான் மகரூப் தொடர்ந்து கூறியது, “முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாச்சார ஆடை அணிந்து வர மறுக்கப்படுவதால் இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் காலச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதே போன்ற ஒரு பிரட்சனை சிறிஜெயவர்தனபுற ஜனாதிபதி வித்யாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றது அந்த’ மதத்தவர் தமது மதத்தை பிரதிபலிக்கும் கலாச்சார ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது நினைவுகூறத்தக்கது,” என தெரிவித்தார்[2].
முஸ்லிம் அமைப்புகள் தங்களது சுயமுகங்களை வெளிக்காட்டியது: முஸ்லிம் அமைப்புகள், இதனை எதிர்த்து மதவாத ரீதியில் பதாகைகளை வைத்துக் கொண்டும், தூண்டும் வகையிலும் பேசி, ஆர்பாட்டம் செய்தனர்[3]. 27-04-2018 ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர்- சுலோச்சனா ஜெயபாலன், பாடசாலை நிர்வாகம் எதிர்த்து கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தனர்[4]. “கலாச்சாரத்தின் பெயரால் ஆபாசத்தை ஆதரிக்காதே, உடலை மறைத்தால் காமுகர்கள் தான் கோபப் படுவார்கள், ………………..சேலை உலக மகா ஆபாசம்…………” என்றெல்லாம் பதாகைகள், கோஷங்கள், சமூகவளைத் தளங்களில் கேவலமான பதிவுகள், பிரச்சாரங்கள் முதலியவை, முகமதியரின் உண்மை முகத்தை வெளிக்காட்டி விட்டது[5]. இருப்பினும், இதைப் பற்றி சந்தோசமகாவே இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், அப்பாதகை புகைப் படங்களில் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறர்கள்[6]. எப்படியாவது, அடிப்படைவாதத்தை, உரிமை என்று சொல்லி, பிரச்சினையை உண்டாக்கி, சமூகத்தில் கலவரத்தை உண்டாக்கத்தான் திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தெரிகிறது. இனி ஶ்ரீலங்காவில் குண்டுகள் வெடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
துலுக்கரின் கேவலமான செயல்கள்[7]: தீவகம் என்ற ஶ்ரீலங்கா இணைதளம், இவ்விரங்களைக் கொடுக்கிறது: முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேவலம் கெட்ட சில முஸ்லிம்கள் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை ஆபாச பொருளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்களின் அவயங்களை ஆபாசமாக கோடிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பெண்களும் கேவலமானவர்கள் என்ற தொணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை, மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து தங்கள் கேவலமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளனர்.குறித்த பாடசாலையில் ஏற்கனவே மூன்று முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பாடசாலைக்குரிய சீருடையுடன் தமது மத விதிகளை மீறாமலும் ஸ்காப் அணிந்து வந்தனர். ஆனால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை ஒருவர், தான் அபாயாவுடன் தான் வருவேன் என்று கூறியுள்ளார். பாடசாலை விதியை மீறி வந்தும் உள்ளார். இந்த நிலையில் பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார். அத்துடன் ஏனைய முஸ்லிம் ஆசிரியைகளையும் அபாயாவுடன் வர வைப்பேன் என்று பலருடன் சென்று மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[8].
ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு[9]: திருகோணமலை ஆசிரியைகளின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக் களப்பு மாராளுமன்ற சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், இது தொடபில் கலந்துரையாட எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடஎது கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்[10]. இவ்வாறு முகமதிய இணைதளங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்தியர்களைப் ப்றுத்த வரையில் “அபயா” பிரச்சினை தெரிந்திருக்கலாம், ஆனால், நிச்சயமாக, “ஹபாயா” பிரச்சினை தெரியாது. தமிழக மற்றும் தமிழகப் பிரிவினைவாத, கம்யூனிஸ ஊடகக் காரர்களும், இதைப் பற்றி எந்த செய்தியினையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். இனி “இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை,” என்று போட்டு வைத்துள்ளதால், முகமதியர் மற்றும் அவர்களது விசுவாசமான தோழர்கள், இனி செய்தியைப் போட ஆரம்பிக்கலாம்.
© வேதபிரகாஷ்
28-04-2018
[1] ஐபிசி.தமிழ், திருமலை பாடசாலை விவகாரம்; பின்னணியில் உள்ளவர்களை கண்டு பிடிக்கவும்!, April 27, 18
[2] https://news.ibctamil.com/ta/internal-affairs/Tirumala-school-affair-
[3] இம்போர்ட்.மிர்ரர், ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, ஹபாயா அதிர்வு!! கிண்ணியாவில் கண்டன ஆர்பாட்டம்!!, April 27, 2018.09.06.00 PM.
[4] http://www.importmirror.com/2018/04/blog-post_567.html
[5] நியூஸ்.வன்னி, உச்சத்தை தொட்ட முஸ்லிம் ஆசிரியையின் ஆடை விவகாரம்…வெடித்தது போராட்டம், on: April 27, 2018.
[6] https://www.newsvanni.com/archives/60791
[7] தீவகம், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் காவாலித்தனமான இளைஞர்களுக்கு எச்சரிக்கை!, on: April 27, 2018
[8]http://www.theevakam.com/2018/04/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/
[9] ஜாப்னா.முஸ்லிம், ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு, 28-04-2018.