புது தில்லி, ஜன. 27, 2010: இலங்கை அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபட்சவுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையில் இலங்கை அனைத்து துறைகளிலும் முன்னேறும் என்றும், நாட்டில் பூரண அமைதி நிலவும் என்றும் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளா.
உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு, அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக தொலைபேசியில் ராஜபட்சவிடம் மன்மோகன் குறிப்பிட்டார்.