ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)
திடீரென்று முகமதிய ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தது: ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை 7.30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக முழு ஆடையணிந்த ஐந்து முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப் பாடசாலைகளின் வருகையும், அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒழுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது[1]. அந்த வகையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இந்த பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன், பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது[2]. இது காலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்மார்கள் மிரட்டியது பாடசாலை நாகரிகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அத்துடன், அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது”.
முகமதிய ஆசிரியைகளின் கணவன்மார் வந்து மிரட்டியது[3]: தொடர்ந்து அவர்கள் கூறியது, “ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும் இப் பிரச்சினையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இன வேறுபாட்டை இவ்வாசிரியர்களால் தூண்டப்படுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்மார்கள் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன், எமது பாடசாலை விதிமுறைகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு மதக்காரணங்களை காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஆரம்ப நிலையில் இப் பிரச்சினையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கின்றோம். இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது,” என குறிப்பிட்டுள்ளனர்[4].
முகமதியர் ஏதோ ஒரு திட்டத்துடன் இப்பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்: ஆக இதிலிருந்து தெரிவதாவது:
- இந்து மகளிர் கல்லூரியில், முகமதிய பெண்களுக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகமதிய கல்லூரியில் அவ்வாறுள்ளதா என்று தெரியவில்லை.
- இதுவரை சேலைக் கட்டிக் கொண்டு வந்திருந்த, முகமதிய ஆசிரியைகள், திடீரென்று ஹபாயா / புர்கா / பர்தா அணிந்து வருவோம் என்று, கல்லூரி அதிபர் / நிர்வாகத்திடம் சொல்லியிருக்கின்றனர்.
- ஏனிப்படி திடீரென்று செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அது எங்கள் உரிமை, அதனால் செய்யப் போகிறோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.
- மறுத்தபோது, எழுத்து மூலம் ஹபாயா அண்ணிந்து வர அனுமதி கோரினர்.
- அதையும் மறுத்தபோது, அவர்களது கணவன்மார் வந்து கத்தி பேசி, மிரட்டியுள்ளனர்.
- அதனால், அக்கல்லூரி, “இந்து மகளிர் கல்லூரி” என்பதால், அவ்வாறு செய்ய முடியாது, பிறகு, அவரவர் வேவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வர ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
- அந்நிலையில் அவர்களது கணவன்மார் மறுபடியும் வந்த வந்து கத்தி பேசி, திட்டி, “விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்ற ரீதியில் மிரட்டியுள்ளனர்.
- இதனால் தான், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதனால், எதிர்மறை விளைவு ஏற்படும் என்றறிந்தவுடன், மதரீயில் பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்பாட்ட,ம் என்று முகமதியர் ஆரம்பித்தனர்.
இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது[5]: அதற்கேற்றபடி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன என தெரிவித்துள்ளார்[6]. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது[7]. பாடசாலைகளில் தங்களுடைய கலாசாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்[8]. பிறகு, ஒரு குறிப்பிட்ட கல்லூரியில், அடுத்தவர் எப்படி தங்களுடைய உரிமை என்று பிரச்சினை ஏற்படுத்த முடியும்?
ஹாபாயா அணிந்து வருவேன் என்ற ஆசிரியைகளுக்கு இடமாற்றம் கொடுத்தது: கொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, [ஹபாயா அணிந்தபடி கடமைக்கு செல்லும் ஆசிரியைக்கு[9]], சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்[10]. ஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் 26-04-2018 அன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்[11]. ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்[12]. நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பாடசாலையின் சமய-கலாச்சாரம் பேணப்பட வேண்டும்[13]. ஆசிரியர்கள் பாடசாலைக்குப் பொருத்தமான, பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இதேவேளை இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் 25-04-2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© வேதபிரகாஷ்
28-04-2018
[1] பட்டி.நியூஸ், அதிபருடன் ஆசிரியர்கள், கணவன்மார்கள் முர்ரண்பட்டமையே ஹபாய ;பிரச்சினைக்கு காரணம் இது எந்த ஒரு இனத்திற்கும் எதிரானதல்ல–ஏற்பாட்டாளர்கள், வெள்ளிக்கிழமை, April 27, 2018.
[2] http://www.battinews.com/2018/04/blog-post_839.html
[3] தினப்புயல், திருகோணமலை – ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம், April 26, 2018.
[4] http://www.thinappuyalnews.com/archives/152305
[5] குவிக்,நியூஸ்.தமிழ், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.
[6] https://www.quicknewstamil.com/2018/04/28/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/
[7]தமிழ்வின், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.
[8] http://www.tamilwin.com/community/01/181129?ref=recommended3
[9] பேஜ்.தமிழ், ஶ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி – ஹபாயா ஆசிரியைக்கு இடமாற்றம்: பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு!, April 28, 2018.; http://www.pagetamil.com/2661/
[10] குவிக்,நியூஸ்.தமிழ், சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரம்! முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்!, April 26, 2018
[11]https://www.quicknewstamil.com/2018/04/26/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/
[12] தமிழ்வின், திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஹபாயா விவகாரம்: விசேட கலந்துரையாடல், April 26, 2018.