Posts Tagged ‘இந்து காலேஜ்’

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

Muslims denigrating comments-3

சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை கண்டு பிடிக்க வேண்டும்: சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்[1]. திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் 26.04.2018 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்ததாவது, “இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரட்சனையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த வேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரட்சனையை பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன.  தமிழக அரசியல்வாதியின் பேச்சைப் போலவே இவர் பேச்சு இருக்கிறது.

 Muslims denigrating comments-1

ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: இம்ரான் மகரூப் தொடர்ந்து கூறியது, “முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாச்சார ஆடை அணிந்து வர மறுக்கப்படுவதால் இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் காலச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதே போன்ற ஒரு பிரட்சனை சிறிஜெயவர்தனபுற ஜனாதிபதி வித்யாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றது அந்தமதத்தவர் தமது மதத்தை பிரதிபலிக்கும் கலாச்சார ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது நினைவுகூறத்தக்கது,” என தெரிவித்தார்[2].

Muslims denigrating comments-4

முஸ்லிம் அமைப்புகள் தங்களது சுயமுகங்களை வெளிக்காட்டியது: முஸ்லிம் அமைப்புகள், இதனை எதிர்த்து மதவாத ரீதியில் பதாகைகளை வைத்துக் கொண்டும், தூண்டும் வகையிலும் பேசி, ஆர்பாட்டம் செய்தனர்[3]. 27-04-2018 ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர்- சுலோச்சனா ஜெயபாலன், பாடசாலை நிர்வாகம் எதிர்த்து கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தனர்[4]. “கலாச்சாரத்தின் பெயரால் ஆபாசத்தை ஆதரிக்காதே, உடலை மறைத்தால் காமுகர்கள் தான் கோபப் படுவார்கள், ………………..சேலை உலக மகா ஆபாசம்…………” என்றெல்லாம் பதாகைகள், கோஷங்கள், சமூகவளைத் தளங்களில் கேவலமான பதிவுகள், பிரச்சாரங்கள் முதலியவை, முகமதியரின் உண்மை முகத்தை வெளிக்காட்டி விட்டது[5]. இருப்பினும், இதைப் பற்றி சந்தோசமகாவே இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், அப்பாதகை புகைப் படங்களில் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறர்கள்[6]. எப்படியாவது, அடிப்படைவாதத்தை, உரிமை என்று சொல்லி, பிரச்சினையை உண்டாக்கி, சமூகத்தில் கலவரத்தை உண்டாக்கத்தான் திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தெரிகிறது. இனி ஶ்ரீலங்காவில் குண்டுகள் வெடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

Muslims denigrating comments-5

துலுக்கரின் கேவலமான செயல்கள்[7]: தீவகம் என்ற ஶ்ரீலங்கா இணைதளம், இவ்விரங்களைக் கொடுக்கிறது: முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேவலம் கெட்ட சில முஸ்லிம்கள் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை ஆபாச பொருளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்களின் அவயங்களை ஆபாசமாக கோடிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பெண்களும் கேவலமானவர்கள் என்ற தொணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை, மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து தங்கள் கேவலமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Anti-Hindu demo - Kanni 27-04-2018-2

கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளனர்.குறித்த பாடசாலையில் ஏற்கனவே மூன்று முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பாடசாலைக்குரிய சீருடையுடன் தமது மத விதிகளை மீறாமலும் ஸ்காப் அணிந்து வந்தனர். ஆனால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை ஒருவர், தான் அபாயாவுடன் தான் வருவேன் என்று கூறியுள்ளார். பாடசாலை விதியை மீறி வந்தும் உள்ளார். இந்த நிலையில் பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார். அத்துடன் ஏனைய முஸ்லிம் ஆசிரியைகளையும் அபாயாவுடன் வர வைப்பேன் என்று பலருடன் சென்று மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[8].

Anti-Hindu propagada, blaming RSS - 28-04-2018-

ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு[9]: திருகோணமலை ஆசிரியைகளின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக் களப்பு மாராளுமன்ற சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், இது தொடபில் கலந்துரையாட எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடஎது கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்[10]. இவ்வாறு முகமதிய இணைதளங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்தியர்களைப் ப்றுத்த வரையில் “அபயா” பிரச்சினை தெரிந்திருக்கலாம், ஆனால், நிச்சயமாக, “ஹபாயா” பிரச்சினை தெரியாது. தமிழக மற்றும் தமிழகப் பிரிவினைவாத, கம்யூனிஸ ஊடகக் காரர்களும், இதைப் பற்றி எந்த செய்தியினையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். இனி “இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை,” என்று போட்டு வைத்துள்ளதால், முகமதியர் மற்றும் அவர்களது விசுவாசமான தோழர்கள், இனி செய்தியைப் போட ஆரம்பிக்கலாம்.

© வேதபிரகாஷ்

28-04-2018

Anti-Hindu demo - Kanni 27-04-2018

[1] ஐபிசி.தமிழ், திருமலை பாடசாலை விவகாரம்; பின்னணியில் உள்ளவர்களை கண்டு பிடிக்கவும்!, April 27, 18

[2] https://news.ibctamil.com/ta/internal-affairs/Tirumala-school-affair-

[3] இம்போர்ட்.மிர்ரர், ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, ஹபாயா அதிர்வு!!  கிண்ணியாவில் கண்டன ஆர்பாட்டம்!!, April 27, 2018.09.06.00 PM.

[4] http://www.importmirror.com/2018/04/blog-post_567.html

[5] நியூஸ்.வன்னி, உச்சத்தை தொட்ட முஸ்லிம் ஆசிரியையின் ஆடை விவகாரம்வெடித்தது போராட்டம், on: April 27, 2018.

[6] https://www.newsvanni.com/archives/60791

[7] தீவகம், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் காவாலித்தனமான இளைஞர்களுக்கு எச்சரிக்கை!, on: April 27, 2018

[8]http://www.theevakam.com/2018/04/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/

[9] ஜாப்னா.முஸ்லிம், ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு, 28-04-2018.

[10] http://www.jaffnamuslim.com/2018/04/rss_28.html

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன் – இப்படி விஷமத்தனமாக செய்திகளை வெளியிடுவது ஏன்?

ஜூன் 2, 2013

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன் – இப்படி விஷமத்தனமாக செய்திகளை வெளியிடுவது ஏன்?

DG12_09_27_220.jpg

பெருமைப்படவேண்டிய விஷயத்தைக் குதர்க்க நோக்கத்தோடு வெளியிடும் நோக்கம் என்ன?: சிக்காகோவில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் UIC (University of Illinois at Chicago[1]) அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது[2] என்று ஏதோ ரகசியத்தைக் கண்டுவிட்டது போல சில இணைதளங்கள் வெளியிட்டுள்ளன:

ஜாப்னா இந்து காலேஜ், தனது இணைதளத்திலும் பெருமையாக வெளியிட்டுள்ளது[6]. அக்கல்லூரியில் 1968-75 ஆண்டுகளில் படித்த மாணவன், 29-05-2013 அன்று வெள்ளைமாளிகை நிகழ்சியில் பாராட்டப் பட்டவர் என்று விவரங்களைக் கொடுத்துள்ளது[7].

Sivalingam Sivananthan, professor of physics

கௌரவிக்கப் பட்ட விஞ்ஞானி: விருது அந்த பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்தில் வெளிவந்துள்ள விவரத்தை, ஆங்கில இணையத்தளமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது[8], என்று குறிப்பிட்டு, உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பது தெரிகிறது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி அண்மையில் கெளரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப் பட்டுள்ளார். கடந்த 30 ம் தேதி சிவலிங்கம் சிவநாதனுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தமது அறிவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த நிகழ்சியின் விடியோவை இங்கு காணலாம்[9].

???????????????????????????????

உயர்ந்த தொழிற்நுட்பம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்: உயர்ந்த தொழிற்நுட்பம் கொண்ட வெப்பங்காக்கும் கருவியை உருவாக்கியவர் சிவநாதன். போலிங்புரூக், Ill என்ற இடத்தில், சிவநாதன் லெபோரட்டரீஸ் இன்க் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கண்ணுக்குப் புலப்படாத சிவப்புநிறக்கற்றை தொழிற்நுட்பம், கற்றை அலைகளைக் கண்டறிதல், திடப்பொருள் ஆராய்ச்சி முதலியவற்றில் இந்த ஆராய்ச்சிக் கூடம் ஈடுபட்டுள்ளது. ஒளிக்கற்றை ஆராய்ச்சியில் இது மிகவும் அடிப்படையானது மற்றும் முக்கியமானது என்பதால், இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னுடைய கண்டுபிடிப்புகளால் ஆராய்ச்சி மற்றும் தொழிற்சாலை உற்பத்தி இவைகளுக்கிடையே உள்ள தூரத்தைக் குறைக்க வழிசெய்கிறார் என்று பாராட்டப்படுகிறார்[10].

Sivanathan Laboratories

இலங்கைத் தமிழர் பாராட்டப் பட்டுள்ளார்: அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன், அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார். பேராசிரியர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க், இப்படியான அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணுமின் தொழிற்நுட்பம் தொடர்பில் புகழ்பெற்றவர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவருக்கு சகல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது தமது கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

Sivanathan - Lankasri mischief

விஷமத் தனத்தைத் தூண்டும் தமிழ் இணை தளங்கள்: உண்மையினைத் திரித்து, இப்படி துவேஷம் உண்டாக்கும் வகையில் இந்த தமிழ் இணைதளங்கள் செய்துள்ளது கண்டிக்கப்பட வேண்டியதாகும். வழக்கம் போல, இலங்கைத் தமிழனா, அமெரிக்கத் தமிழனா, தமிழ் பேசும் அமெரிக்கனா, அமெரிக்கக் குடிமகனா என்றெல்லாம் கற்பிப்பதை விட, இலங்கை வம்சாவளி என்று பெருமைப்படுவதை விடுத்து, இப்படி ஏன் வெளியிட வேண்டும்.  லங்காஶ்ரீ நியூஸ் என்ற ஆங்கிலத் தளமும், “US Honours Sivalingam Sivananthan for Technology Contribution to Raid in Which Osama Bin Laden was Killed [Saturday, 01 June 2013, 08:34.01 AM GMT +05:30 ]”, என்று வெளியிட்டுள்ளது[11]. உள்ளே அப்படியே ஆங்கிலத்தில் உள்ளவற்றைக் காப்பியடித்துப் போட்டுவிட்டு, தலைப்பு மட்டும் அப்படி போட்டுள்ளது. போதாகுறைக்கு, ஒசாமா பின் லேடனும், சிவநாதனும் சேர்ந்திருப்பது போல புகைப்படத்தையும் போட்டுள்ளது. தமிழ்.நெட்.காம் சரியாகப் போட்டுள்ளது[12].

 

மனைவியை விடுத்து படிக்க வந்த சிவநாதன்: சிவநாதன் 1983ல் தனது ஊரில் கலவரங்கள் ஏற்பட்டபோது கலங்கினான், ஏனெனில் அப்பொழுதுதான், இல்லினாயிஸ் பல்கலைகழகத்தில் நுழைவு தேர்விற்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தான்[15]. 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அப்பொழுது தனது மனைவியை தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் தோல்வியடைந்தான். “என் மனைவி எங்கு இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மறைந்திருக்கிறாளா என்பதும் தெரியவில்லை”, என்று கவலைப்பட்டார். பிறகு அவள் உயிரோடு இருந்ததை அறிந்து கொண்டார்[16]. இப்படி கஷ்டப்பட்டவர் தாம், இன்று கடின உழைப்பினால் முன்னேறி, விஞ்ஞானியாக புகழைப் பெற்றுள்ளார். ஆகவே, பாராட்ட மனமில்லை என்றால், சும்மா இருந்து விட்டு போகலாம். அதற்கு பதிலாக இப்படி விஷமத்தனத்தை செய்ய வேண்டாம்.

 

வேதபிரகாஷ்

© 02—06-2013


[7] Dr.Sivalingam Sivananthan, a distinquished old boy of Jaffna Hindu College (1968 -75) and currently professor of physics at the University of Illinois Chicago and founder of Sivananthan Laboratories in Bolingbrook, USA, has been named a White House Champion of Change, an honour that recognizes immigrant entrepreneurs. He was given this honor at a ceremony at the White House on May 29th 2013.

[10] Sivananthan is the founder of the high-tech, Bell-Labs-styled incubator, Sivananthan Laboratories, Inc. in Bolingbrook, Ill. The Laboratories’ focus is on infared technology, radiation detection, materials research and biosensors.Because, at its most fundamental, MCT technology is about transforming light into electricity, Sivananthan is also leading an effort to develop next-generation solar power. To that end, he helped found InSPIRE (the non-profit Institute for Solar Photovoltaic Innovation, Research, and Edu-training), whose mission is training Illinois’s workforce and exciting Illinois undergraduate and high school students to create a renewable energy and solar eco-system in Illinois.In Sivananthan Laboratories Sivananthan is promoting economic growth by fostering cutting-edge, fundamental research and development that bridges the gap between academia and industry.

[15] In the summer of 1983, the microphysics pioneer at the University of Illinois at Chicago was preparing to take his preliminary examination at the university to begin his doctoral dissertation. That’s when he heard that riots had begun back home in Sri Lanka – the start of a civil war that only ended in 2009. Sivananthan wanted to head back right away. He had tried and failed to get in touch with his wife who was in the northern part of the country, the center of the violence. “We had not managed to make any connection with her, I didn’t know if she was hiding, where she was,” he said. http://news.medill.northwestern.edu/chicago/news.aspx?id=182831