தமிழகம் மூலம் போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளதா?
தீவிரவாதம் போதைமருந்து, ஆயுத சப்ளை: ஜேன்ஸ் பாதுகாப்பு வாரப்பத்திரிக்கை என்பதன்படி எல்.டி.டி.ஈ.யின் போதை மருந்து கடத்தல் வியாபாரம், அமெரிக்கா மற்று கனடா நாடுகளில் அதிக அளவில் இருப்பதாகக் கூறுகிறது[1]. இது எல்.டி.டி.ஈ.யிற்கு, ஆண்டிற்கு USD 200-300 million வருவாயைக் கொடுக்கிறது. இது வெடிகுண்டுகள், ஆயுதங்கள் முதலியவற்றை வாங்க உபயோகப்பட்டது[2]. இதைத்தவிர, அமெரிக்காவின் போதை மருந்து கட்டுப்பாட்டகம், 1980களினின்றே இது தனது உள்நாட்டு கலகம் / போர் முதலிய காரியங்களுக்குத் தேவையான பணத்தை போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் மூலம் பெற்றுவருகிறது என்று கூறியுள்ளது[3]. உலகத்திலேயே ஆப்கானிஸ்தானில்தான் 70% மேலான போதை மருந்துக்கு வேண்டிய பொருட்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை இந்தியாவின் மூலம், அதன் மூலமாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றது. சென்ற வருடத்தில் அதன் வீழ்ச்சிற்குப் பிறகு, இது குறையிம் என்று எதிர்பார்க்கப்பட்டது[4]. இலங்கையில் விடுதலைப் புலிகளின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடத்தப்பட்டு வந்த போதை பொருள் கடத்தல் குறைந்து வருகிறது, என்று கருதினாலும், அது கேடமைன் மற்றும் இதர வடிவங்களில் செல்ல ஆரம்பித்துள்ளன[5].
எல்டி.டி.ஈ – ஆப்கானிஸ்தான் தொடர்பு: சர்வதேச அளவில், ஆப்கானிஸ்தானில் தான் அதிகமான அளவில் போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, பல்வேறு வழிகளில் கடத்தப்பட்டு, உலக நாடுகளில் செயல்படும் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி, பணமாகின்றன. இந்த பணத்தை கொண்டு, பயங்கரவாத கும்பல்கள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. இதில் தமிழகத்தில் இருந்த ச்லருக்கும் தொடர்பும் இருந்தது.
குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல்[6]: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து, சென்னை வழியான போதை மருந்து கடத்தல் குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இலங்கையில் 2008ம் ஆண்டு மத்தியில் உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடந்தது. வாழ்வா, சாவா என்ற முடிவோடு புலிகள் இலங்கை ராணுவத்தை எதிர்கொண்டனர். இந்த கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிகமான அளவில் போதை பொருட்கள் கடத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், மலேசியாவிற்கு செல்ல இருந்த சிவகங்கையைச் சேர்ந்த மாசிலாமணி (42) என்ற பயணியிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கேடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரும்பாலும் ஸ்ரீலங்கையைச் சேர்ந்த ஆசாமிகள் சிக்குகின்றனர்: சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பரியல் ரியானோ (29) என்ற பெண்ணிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கிலோ ஹெராயின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2008, ஆகஸ்ட் மாதத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (35) என்பவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு 2008ம் ஆண்டு முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கை உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இப்போரில், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, புலிகளின் சாம்ராஜ்யம் அங்கு முடிந்தது. சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடந்து வந்த போதை பொருள் கடத்தல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் குறைந்தால், கேரளாவில் அதிகமாகிறது: அத்தகைய போக்கை 2005லேயே, அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்[7]. இதனால், எல்.டி.டி.ஈ.யினர் தமக்கு தமிழகத்தில் உள்ள வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவு கூட்டங்களை பாதிக்க எல்.டி.டி.ஈ.யினர் விரும்பவில்லை. குறிப்பாக, தமிழகக் கூட்டணி ஆட்சியில், திமுக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரிக்கவேண்டியிருந்தது, ஆனால், காங்கிரஸ் எதிர்க்கவேண்டியிருந்தது. அதுமட்டுமலாது, கேரள தொடர்பு, முஸ்லீம்களை கூட்டில் சேர்த்துக் கொள்ள ஏதுவாயிற்று. ஆனால், ஸ்ரீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்க ஆரம்பித்து விட்டது.
இந்திய போதைக் கட்டுப்பாட்டுத் துறை சிறப்பாகச் செயல்படுவது: தேசிய போதைமருந்து தடுப்பகம் மற்றும் சென்னை விமான நிகையத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரிகல் பலதடவை போதை மருந்து கடத்தல்காரர்ககளை கையும் களவுமாகப் புடித்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவரை கேட்டபோது, “சென்னை வழியாக போதை பொருட்கள் கடத்துவது குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கெடுபிடிகளால் கடத்தல் கும்பல், தங்களின் கடத்தலை சென்னையை தவிர்த்து, வேறு விமான நிலையங்களின் வழியாக நடத்திக் கொண்டிருக்கலாம். ஒரு சில ஆசிய நாடுகளில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாலும் கடத்தல் குறைந்திருக்க வாய்ப்புண்டு’ என்றார். அவர்கள் முறைந்துள்ளது என்றுதான் சொல்கிறார்களே தவிர, இல்லை என்று சொல்லவில்லை. சமீபத்தில் தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகள், அவர்களது இருக்கும் தன்மையினைப் புலப்படுத்துகிறது[8].
தமிழகத்தில் எல்.டி.டி.ஈ.யின் வாரிசு / அதிகாரச் சண்டை நடக்கிறதா? எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது போல இருக்கிறது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் இல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[9]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[10], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முததலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.
[1] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal.
[2] The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.
[3] Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous Mix, Statement of Steven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html
[4] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of India http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw
[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=59432;
ஆகஸ்ட் 29,2010 சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட போதைப் பொருள் ஹெராயின் வகையைச் சேர்ந்ததா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் குறித்து போதைப் பொருள் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72853
[6] தினமலர், குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல், ஆகஸ்ட் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72601
[7] Heroin smugglers avoid Tamil Nadu, prefer Kerala as landing point (April 3, 2005)
By K.T. Sangameswaran ; CHENNAI, APRIL 2. Smugglers of heroin, meant for Sri Lanka, are now choosing Kerala as the landing point, going by the haul made by the Narcotics Control Bureau (NCB) in the last one year. The smugglers seem to avoid Tamil Nadu and even if their crossing the State is inevitable, they ensure that their exposure is minimal, say narcotics control authorities.
“Avoid Tamil Nadu to the extent possible for landings and transit of the drugs. Don’t be in the State for long.” This seems to be the instruction of the druglords to their operators, Shankar Jiwal, NCB’s south zonal Director, told The Hindu .
http://www.hindu.com/2005/04/03/stories/2005040306420400.htm
[8] Editor, Asian Tribune, LTTE down, but not out; Tamil Diaspora keeps them alive , Mon, 2010-06-21
http://www.asiantribune.com/news/2010/06/21/ltte-down-not-out-tamil-diaspora-keeps-them-alive
[9] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html
[10] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.